வீடியோ; மீண்டும் அதே தவறு… தேவை இல்லாமல் விக்கெட்டை இழந்ததால் செம கடுப்பான சுப்மன் கில்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அசால்டாக அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் (0) மற்றும் ரோஹித் சர்மா (13) ஆகியோர் மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் சிக்கி விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர். இதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
சுப்மன் கில் விக்கெட்டை இழந்த வீடியோ இங்கே;
— javed ansari (@javedan00643948) March 19, 2023
அடுத்ததாக களத்திற்கு வந்த கே.எல் ராகுல் (9) மற்றும் ஹர்திக் பாண்டியா (1) ஆகியோரும் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர். நீண்டநேரம் தாக்குபிடித்த விராட் கோலி 35 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் போட்டியின் 17 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி வெறும் 82 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.