கொரோனா வைரஸ் தாண்டவமாடும் மைதானத்தில் ஒருநாள் தொடர்; சர்ச்சையைக் கிளப்பப் போகும் இங்கிலாந்து அணி !! 1

ஏற்கனவேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக அடித்துக் கொண்டிருக்கிறது என் காரணமாக அங்கு மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இந்த நேரத்தில் மகாராஷ்டிராவில் உள்ள துணியை மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரை நடத்த திட்டமிட்டு இருப்பது வீரர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், ஐந்து டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பிறகு, அடுத்ததாக டி.20 தொடர் நடைபெற உள்ளது, அதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் புனே மைதானத்தில் நடைபெற உள்ளது.

கொரோனா வைரஸ் தாண்டவமாடும் மைதானத்தில் ஒருநாள் தொடர்; சர்ச்சையைக் கிளப்பப் போகும் இங்கிலாந்து அணி !! 2

மஹாராஷ்டிராவில் இன்னும் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்படாததால், புனேயில் நடத்தப்படும் போட்டிக்கு ரசிகர்களை அனுமதித்தால் கொரோனா வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்தது. இதனால், ரசிகர்கள் இன்றி நடத்த பிசிசிஐ சார்பில் ஆலோசிக்கப்பட்டது. போட்டி நடத்தப்படும் இடத்தை மும்பைக்கு மாற்றலாம் என்ற தகவலும் வெளியானது.

இந்நிலையில், புனேயில் 3 ஒருநாள் போட்டிகளையும் ரசிகர்கள் இன்றி நடத்துவதற்கு மகாராஷ்டிர மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க தலைவர் விகாஸ் ககாட்கர் சந்திப்புக்கு பிறகு போட்டிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாண்டவமாடும் மைதானத்தில் ஒருநாள் தொடர்; சர்ச்சையைக் கிளப்பப் போகும் இங்கிலாந்து அணி !! 3

இப்படி இருக்கையில் வைரஸ் வந்துவிடக்கூடாது என்று பார்த்து பார்த்து அணி வீரர்களை பாதுகாத்து வரும் இங்கிலாந்து அணி பெரும் பிரச்சனையை ஏற்படுத்த போகிறது இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை வீரர்களை அதிக காலம் உயிர் பாதுகாப்பு வளையத்தில் வைத்து இருந்தால் அவர்களுக்கு தொற்று ஏற்படலாம் அல்லது மனச்சோர்வு ஏற்படலாம் என்று கூறி தங்களது அணி தோற்றாலும் பரவாயில்லை என்று முக்கிய வீரர்களுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுத்து விளையாடி வருகிறது இங்கிலாந்து அணி இந்த நேரத்தில் தான் அதிகம் சுற்றி இருக்கும் இடத்தில் ஒரு நாள் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டிருக்கிறது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *