நியூசிலாந்து அணியை வச்சு செய்த முகமது ஷமி; டிராவானது போட்டி !! 1

நியூசிலாந்து அணியை வச்சு செய்த முகமது ஷமி; டிராவானது போட்டி

இந்தியா நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி.20 போட்டி ஷமியின் துல்லியமான பந்துவீச்சால் டிராவில் முடிந்துள்ளது.

இந்தியா நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி.20 போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும், நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சனின் அதிரடி ஆட்டத்தால் கடைசி ஒரு ஓவருக்கு வெறும் 9 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.

போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி அந்த பந்தின் முதல் பந்திலேயே சிக்ஸர் கொடுத்து அதிர்ச்சியளித்தார், அதன் பிறகு 5 பந்துகளில் வெறும் 3 ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலையில் கேன் வில்லியம்சனின் விக்கெட்டை முகமது ஷமி வீழ்த்தி அசத்தினார். இதன் பிற்கு கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் கடைசி பந்தில் ராஸ் டெய்லர் விக்கெட்டை பறிகொடுத்ததால் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி.20 போட்டி டிராவில் முடிந்துள்ளது.

சூப்பர் ஓவர் நடைபெற்று வருகிறது.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *