வீடியோ; முதல் பந்தே மரண மாஸ்... ஸ்டெம்பை தெறிக்கவிட்ட இலங்கை வீரர்; விரக்தியடைந்த இஷான் கிஷன் !! 1

வீடியோ; முதல் பந்தே மரண மாஸ்… ஸ்டெம்பை தெறிக்கவிட்ட இலங்கை வீரர்; விரக்தியடைந்த இஷான் கிஷன் !!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

வீடியோ; முதல் பந்தே மரண மாஸ்... ஸ்டெம்பை தெறிக்கவிட்ட இலங்கை வீரர்; விரக்தியடைந்த இஷான் கிஷன் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு அந்த அணியின் கேப்டனான தசுன் ஷனாகா 56* ரன்களும், குஷால் மெண்டீஸ் 52 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 206 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக உம்ரன் மாலிக் 3 விக்கெட்டுகளையும், அக்‌ஷர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்பின் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷன் (2), சுப்மன் கில் (5), ராகுல் திரிபாதி (5), ஹர்திக் பாண்டியா (12) மற்றும் தீபக் ஹூடா (9) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.

வீடியோ; முதல் பந்தே மரண மாஸ்... ஸ்டெம்பை தெறிக்கவிட்ட இலங்கை வீரர்; விரக்தியடைந்த இஷான் கிஷன் !! 3

இதன்பின் கூட்டணி சேர்ந்த அக்‌ஷர் பட்டேல் – சூர்யகுமார் யாதவ் ஜோடி போட்டியின் 11வது ஓவரில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வானிது ஹசரங்கா வீசிய போட்டியின் 14வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய அக்‌ஷர் பட்டேல் 20 பந்துகளில் அரைசதமும் அடித்தார். மறுமுனையில் தன் பங்கிற்கு இலங்கை அணிக்கு பயத்தை காட்டிய சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.

சூர்யகுமார் யாதவ் வெளியேறியபிறகு களத்திற்கு வந்த சிவம் மாவி தன் பங்கிற்கு 2 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரி விளாசியதன் மூலம், கடைசி ஓவரில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு இந்திய அணி வந்தது.

இலங்கை

போட்டியின் கடைசி ஓவரை மிக சிறப்பாக வீசிய இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷனாகா அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக தசுன் ஷனாகா, ரஜிதா மற்றும் மடுசானகா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இஷான் கிஷன் விக்கெட்டை இழந்த வீடியோ இங்கே;

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *