Virat Kohli, Kapil Dev, Champions Trophy, Cricket

சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடரில் இந்திய அணி, விராட் கோலியை மட்டும் நம்பி இருக்க வேண்டும் என அவசியம் இல்லை என முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் ஜூன் மாதம் மினி உலக கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராப்பி என்னும் தொடர் நடக்க உள்ளது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

பல பிரச்சனைகளுக்கு பிறகு சாம்பியன்ஸ் ட்ராப்பியில் இந்திய அணி கொள்வதை உறுதிப்படுத்தியது இந்திய கிரிக்கெட் அணி வாரியம் (பிசிசிஐ). இதனால் சாம்பியன்ஸ் டிராப்பியில் பங்கேற்கும் 15-பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்திய அணியில் இருக்கும் அனைவரும் திறமையானவர்கள் தான், இதனால் விராட் கோலியை மட்டும் நம்ப வேண்டிய அவசியம் இல்லை என கபில் தேவ் கூறினார்.

இதுகுறித்து கபில் தேவ் கூறுகையில்,’ இந்திய கேப்டன் கோலி, அணியின் ஒருவீரர் தான். அவர் சிறப்பாக விளையாடுவதால் தான் அணியில் இடம் கிடைத்துள்ளது. போட்டியின் போக்குக்கு ஏற்ப விளையாடும் திறமை படைத்தவர் அவர். அதற்காக இந்திய அணியின் சேஷிங் முழுவதுமாக அவரை மட்டுமே நம்பியுள்ளது என்று அர்த்தமில்லை.’ என்றார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *