14 ஆண்டுகாலம் ஆஸ்திரேலிய செய்த சாதனையை 6 ஆண்டுகளில் அசால்டாக செய்த கோலியின் படை! 1
India win during day 4 of the second test match between India and South Africa held at the Maharashtra Cricket Association Stadium in Pune, India on the 13th October 2019 Photo by Deepak Malik / SPORTZPICS for BCCI

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றுடன் முடிவடைந்த புனே டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 எனத் தொடரை கைப்பற்றியது.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. 2013 பிப்ரவரி முதல் 2019 அக்டோபர் வரை இந்தியா தொடர்ச்சியாக 11 தொடர்களை வென்று சாதனைப் படைத்துள்ளது.14 ஆண்டுகாலம் ஆஸ்திரேலிய செய்த சாதனையை 6 ஆண்டுகளில் அசால்டாக செய்த கோலியின் படை! 2

இதற்கு முன் ஆஸ்திரேலியா 1994 நவம்பர் முதல் 2000 நவம்பர் வரை தொடர்ச்சியாக 10 தொடர்களையும், 2004 ஜூலை முதல் 2008 நவம்பர் வரை 10 தொடர்களையும் வென்றிருந்தது. தற்போது ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் ஆட்டத்தை 1 இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரையும் 2-0 என கைப்பற்றியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
இரண்டாவது ஆட்டம் புணேயில் கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 601-5 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.14 ஆண்டுகாலம் ஆஸ்திரேலிய செய்த சாதனையை 6 ஆண்டுகளில் அசால்டாக செய்த கோலியின் படை! 3
கேப்டன் கோலி அற்புதமாக ஆடி 254 ரன்களையும், மயங்க் அகர்வால் 108 ரன்களையும் விளாசினர். பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய தென்னாப்பிரிக்கா 275 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டூ பிளெஸ்ஸிஸ் 64, கேசவ் மகராஜ் 72, பிலாண்டர் 44 ஆகியோர் அந்த அணியில் சிறப்பாக ஆடினர். இந்திய தரப்பில் அஸ்வின் அற்புதமாக பந்துவீசி 4 விக்கெட்டையும். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தென்னாப்பிரிக்கா பாலோ ஆன்: இந்தியா 326 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ûஸ ஆடுமா அல்லது பாலோ ஆனை வலியுறுத்துமா என எதிர்பார்ப்பு எழுந்தது. எனினும் ஞாயிற்றுக்கிழமை காலை கேப்டன் கோலி பாலோ ஆனை வலியுறுத்தினார்.
189 ரன்கள் ஆல் அவுட்: இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க வீரர்கள் எய்டன் மார்க்ரம், டீன் எல்கர் களமிறங்கினர். மார்க்ரம் 0, டி புருயன் 8, டூ பிளெஸ்ஸிஸ் 5, டி காக் 5, செனுரன் முத்துசாமி 9, ரபாடா 4, என சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினர்.
டீன் எல்கர் 48, டெம்பா பவுமா 38, பிலாண்டர் 37, மகராஜ் 22 ஆகியோர் மட்டுமே ஓரளவு நிலைத்து ஆட முயன்றனர்.14 ஆண்டுகாலம் ஆஸ்திரேலிய செய்த சாதனையை 6 ஆண்டுகளில் அசால்டாக செய்த கோலியின் படை! 4
இறுதியில் 67.2 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தென்னாப்பிரிக்கா.
உமேஷ், ஜடேஜா 3 விக்கெட்: அபாரமாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 3-22, ஜடேஜா 3-52, அஸ்வின் 2-45 விக்கெட்டுகளை சாய்த்தனர். இறுதியில் 1 இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா. தொடரையும் 2-0 என கைப்பற்றியது.
ஆட்ட நாயகனாக கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *