இன்னும் பல அடிகள் வாங்க வேண்டியிருக்கும் - ஆஸ்திரேலியா பயிற்சியாளர் 1

இங்கிலாந்திற்கு எதிரான படுதோல்வியால் அணியில் அதிரடி மாற்றத்தை உருவாக்க விரும்பவில்லை என்று ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.

அணியில் அதிரடி மாற்றத்தை உருவாக்க விரும்பவில்லை- ஆஸ்திரேலியா பயிற்சியாளர்
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 50 ஓவரில் 481 ரன்கள் குவித்து உலக சாதனைப் படைத்தது. பின்னர், பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 239 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.இன்னும் பல அடிகள் வாங்க வேண்டியிருக்கும் - ஆஸ்திரேலியா பயிற்சியாளர் 2

இந்த தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘இங்கிலாந்தின் இந்த ஆட்டம் தற்செயலாக நடந்தது அல்ல. அவர்கள் நம்பர் ஒன் இடத்தில் உள்ளனர். நான் இதுபோன்ற எந்தவொரு ஆட்டத்தையும் இதுபோன்ற பார்த்ததில்லை.

இளம் வீரர்களை கொண்ட எங்கள் அணி இதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த ஆட்டத்தை விட மிகக்கடினமாக இருக்காது. முதல் மூன்று வீரர்கள் துவம்சம் செய்துவிட்டனர்.இன்னும் பல அடிகள் வாங்க வேண்டியிருக்கும் - ஆஸ்திரேலியா பயிற்சியாளர் 3

அணியில் அதிரடி மாற்றம் கொண்டு வர நான் விரும்பவில்லை. நாங்கள் அணியை ஏதாவது ஒரு வகையில் கட்டமைக்க வேண்டும். நீங்கள் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், ஏராளமான மாற்றத்தை நோக்கி செல்ல முடியாது. நாதன் லயன் அதிகமான போட்டியில் விளையாடியுள்ளார். அவர் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.

ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான தரவரிசையில், ஆஸ்திரேலிய அணி பெரும் சரிவை சந்தித்துள்ளது

கிரிக்கெட்டில் மாபெரும் பலம் வாய்ந்த அணியாக வலம் வந்தது ஆஸ்திரேலியா. உலகின் எந்த அணியாக இருந்தாலும், அந்த அணியை அவர்கள் சொந்த மண்ணிலேயே வைத்து தோற்கடிப்பது ஆஸ்திரேலியாவின் வழக்கம். கில்கிறிஸ்ட், பாண்டிங், ஹெய்டன், சைமண்ட்ஸ், பெவன், பிரட் லீ, மெக்ரத், வார்னே என்று முன்னாள் வீரர்கள் கொண்ட ஆஸி., அணி களம் இறங்கினாலே, எதிரணியின் தோல்வி பாதி உறுதி செய்யப்பட்டுவிடும். அப்படிப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடு சமீப ஆண்டுகளில் சரிவை சந்தித்தால், தற்போது அந்த அணி ஒருநாள் தரவரிசையிலும் சரிவை சந்தித்துள்ளது.இன்னும் பல அடிகள் வாங்க வேண்டியிருக்கும் - ஆஸ்திரேலியா பயிற்சியாளர் 4

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்வியால் இன்று வெளியிடப்படட ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஆஸ்திரேலியா 34 வருடத்திற்குப் பிறகு இந்த சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முன் 1984-ல் 6-வது இடத்தில் இருந்தது.

இங்கிலாந்து 124 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 122 புள்ளிகளுடன் இந்தியா 2-வது இடத்திலும், 113 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும், 112 புள்ளிகளுடன் நியூசிலாந்து 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *