Ricky Ponting, Ricky Ponting IPL, Ricky Ponting IPL XI, Ricky Ponting IPL 2017, IPL 2017, Cricket

தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் தொடர் வெற்றிகரமாக நடந்து கொண்டு வருகிறது. முதல் பாதி முடிந்த நிலையில் முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங், இருக்கும் ஐபில் அணிகளில் இருந்து ஒரு அணியை தேர்வு செய்துள்ளார்.

அவருடைய அணியில் நான்கு இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளார்கள். அவர் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹசிம் ஆம்லா மற்றும் டேவிட் வார்னரும், அடுத்தபடியாக சுரேஷ் ரெய்னாவும் இருக்கிறார்கள்.

அவருடைய அணியில் மும்பை இந்தியன்ஸில் இருந்து 4 வீரர்களும், ஐதராபாத்தில் இருந்து 3 வீரர்களும், பஞ்சாபில் இருந்து 2 வீரர்களும், டெல்லி மற்றும் குஜராத் அணியில் இருந்து தலா ஒரு வீரர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

‘மும்பைக்கு எதிராக ஆம்லா சதம் அடித்த விடியோவை பார்த்தேன். சிறப்பாக ஆடினார். மலிங்காவை கடைசி நேரத்தில் பின்னி எடுத்துவிட்டார். அவர் நல்ல பார்மில் உள்ளார்,’ என ரிக்கி பாண்டிங் கூறினார்.

அவர் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்து ஒரு வீரரை கூட தேர்வு செய்யவில்லை.

ரிக்கி பாண்டிங்குடைய ஐபில் XI: ஹசிம் ஆம்லா, டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா, ஜோஸ் பட்லர், நிதிஷ் ராணா, கிளென் மேக்ஸ்வெல், கிறிஸ் மோரிஸ், ஹர்பஜன் சிங்க், புவனேஸ்வர் குமார், மிட்சல் மெக்லனகன் , ரஷீத் கான்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *