புதிய உத்வேகம் கிடைத்துள்ளது; சேன் வாட்சன் மகிழ்ச்சி !! 1

புதிய உத்வேகம் கிடைத்துள்ளது; சேன் வாட்சன் மகிழ்ச்சி

தனது முதல் அணிக்கு எதிராகவே சிறப்பாகவே விளையாடி சதம் அடித்தது புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளதாக சேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

புதிய உத்வேகம் கிடைத்துள்ளது; சேன் வாட்சன் மகிழ்ச்சி !! 2

புனே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே முதலில் பந்துவீச்சை தேர்வு  செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சேன் வாட்சன் 106 ரன்களும், சுரேஷ் ரெய்னா 46 ரன்களும், பிராவோ 24 ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 204 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 30 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணியின் மூன்று முக்கிய வீரர்களான ரஹானே(16), க்ளேசன்(7), சாம்சன்(2) என வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.

புதிய உத்வேகம் கிடைத்துள்ளது; சேன் வாட்சன் மகிழ்ச்சி !! 3

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் கூட்டணி சற்று நேரம் தாக்குபிடித்து நிதானமாக ரன் குவித்தது.

பட்லர் 22 ரன்களிலும், ஸ்டோக்ஸ் 45 ரன்களிலும் விக்கெட்டை இழந்தது தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 18.3 ஓவரில் 140 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து பேசிய ஆட்டநாயன் சேன் வாட்சன் “ஐ.பி.எல் அரங்கில் தனது முதல் அணி(ராஜஸ்தான் ராயல்ஸ்)க்கு எதிராகவே சிறப்பாக விளையாடியது புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

புதிய உத்வேகம் கிடைத்துள்ளது; சேன் வாட்சன் மகிழ்ச்சி !! 4

இது குறித்து சேன் வாட்சன் கூறியதாவது, “எனது முதல் அணிக்கு எதிராகவே சிறப்பாக விளையாடிய புது விதமான உத்வேகத்தை கொடுத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட கிடைத்துள்ள வாய்ப்பு மிக அற்புதமானது, இதனை இன்று நானும் சரியாக பயன்படுத்தி கொண்டு என் மீது நம்பிக்கை வைத்த அணிக்கு எனது பங்களிப்பை செய்துவிட்டேன். பிளமிங்  மற்றும் தோனி எனது பேட்டிங் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிறிஸ் கெய்ல் குறித்து பேசிய வாட்சன், “நிச்சயமாக கிறிஸ் கெய்ல் தான் டி.20 அரங்கின் தலை சிறந்த பேட்ஸ்மேன். அதன் காரணமாகவே அவர் Universe Boss என்று அழைக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *