தொடங்கியது ஐ.பி.எல் போர்; டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது சென்னை !! 1

தொடங்கியது ஐ.பி.எல் போர்; டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது சென்னை

ஐ.பி.எல் 2018ம் ஆண்டு தொடரின் இன்றைய முதல் போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து கோலகலமாக நடத்தப்பட்டு வரும் ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று துவங்கியது.

தொடங்கியது ஐ.பி.எல் போர்; டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது சென்னை !! 2

நடிகை தமன்னா, நடிகர் பிரபு தேவா உள்ளிட்ட சினிமா பிரபலங்களின் கோலகல நடனத்திற்கு பிறகு இந்த தோடருக்கான கோப்பை இரு அணிகளின் கேப்டன்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து போடப்பட்ட டாஸில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இம்ரான் தாஹிர், மார்க் வுட், சேன் வாட்சன் மற்றும் பிராவோ ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தொடங்கியது ஐ.பி.எல் போர்; டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது சென்னை !! 3

டாஸை வென்ற பிறகு பேசிய தோனி, இரண்டு வருடங்களுக்கு பிறகு மஞ்சள் ஜெர்சியில் மீண்டும் களமிறங்கியுள்ள மகிழ்சியளிக்கிறது. ஆனால் நாங்கள் உணர்சிவசப்படமால் இந்த தொடரை வெற்றியுடன் துவங்க வேண்டும் என்று நினைக்கிறோம், இதன் காரணமாகவே முதலில் பந்துவீச்சையும் தேர்வு செய்துள்ளோம் என்றார்.

இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;

சேன் வாட்சன், அம்பத்தி ராயூடு, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், தோனி, பிராவோ, ஜடேஜா, ஹர்பஜன் சிங், சாஹர், இம்ரான் தாஹிர், மார்க் வுட்.

மும்பை இந்தியன்ஸ் அணி;

ஈவின் லீவிஸ், இஷான் கிஷான், ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, மாயன்க் மர்கண்டே, கிரன் பொலார்டு, சூர்யகுமார் யாதவ், க்ரூணல் பாண்டியா, மிட்செல் மெக்லெங்கன், முஸ்தபிசுர் ரஹ்மான், ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *