ஐ.பி.எல். தொடரில் இன்று (மே 14) இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் இராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
பெங்களூர் அணி இதுவரை தான் விளையாடிய 11 போட்டிகளில் 4 வெற்றியையும் 7 தோல்வியையும் பெற்றுள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக வெற்றியை பெற முடியாமல் திணறி வருகிறது. இனிவரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டிய நிலையில் பெங்களூர் அணி உள்ளது. எனவே இன்று நடைபெறும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வெற்றிக்காக போராடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் உத்தேச அணி
1.பார்த்திவ் படேல்
கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இவர், இன்றைய போட்டியிலும் அதனை தொடர்வார் என எதிர்ப்பார்க்கலாம்.
2.மொயின் அலி
அனுபவ வீரரான இவர் இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் எதிரணிக்கு நெருக்கடி ஏற்படும்.
3.விராட் கோலி
பெங்களூரு அணியின் முதுகெலும்பான விராட் கோலி இந்த முறை கோப்பையை வெல்ல போராடுவார். தொடர்ந்து இந்த தொடரிலும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.
4.ஏபி டி வில்லியர்ஸ்
கடந்த சில வருடங்களாகவே பெங்களூரு அணிக்காக அற்புதமாக விளையாடி வரும் டி வில்லியர்ஸ், இந்த ஐபில் தொடரையும் சிறப்பாகவே விளையாடி வருகிறார். பெங்களூர் அணி பெற்ற 4 வெற்றிகளில் 3 வெற்றிக்கு இவரே முக்கிய காரணமாக இருந்தார்.
5.மந்தீப் சிங்
இதற்கு முன்பு பெங்களூரு அணிக்காக விளையாடி இருந்த மந்தீப் சிங்கை, மீண்டும் அதே அணி 11வது ஐபில் தொடருக்கு வாங்கியது. நடுவரிசையில் அனுபவம் வாய்ந்த வீரராக இவர் களமிறங்குவார்.
6.சர்ஃபராஸ் கான்
கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இவர், இன்றைய போட்டியிலும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
7.கோலின் டி கிராண்ட்ஹோம்
ஆல் ரவுண்டரான இவர், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தனது பேட்டிங் மற்றும் பீல்டிங் மூலம் பெங்களூர் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். தனது சிறப்பான ஆட்டத்தை இந்த போட்டியிலும் தொடர்வார் எனலாம்.
8.யுஸ்வேந்த்ர சஹால்
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சஹால் எதிரணியை சின்னாபின்னம் ஆக்குவதில் வல்லவர் என்று சொல்லலாம். அவர் சில சிக்ஸர்கள் கொடுத்தாலும், முக்கியமான விக்கெட்டுகளை எடுக்கும் திறமை கொண்டவர்.
9.உமேஷ் யாதவ்
சமீபத்தில் டெஸ்ட் அணியில் இடத்தை விட்ட உமேஷ் யாதவ், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடினால் மீண்டும் டெஸ்ட் அணியில் அவருக்கு இடம் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.
10.டிம் சௌதி
இவர் இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் அது எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
11.முகமது சிராஜ்
இந்திய அணிக்காக ஆடியுள்ள இவர் தற்போது ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடி வருகிறார்.