2018 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் ஜனவரி 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்அறிவித்துள்ளது.
உலகம் முழுக்க பிரபலமான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகின் முன்னனி நட்சத்திர வீரர்களும் பங்கு பெறும் இந்த தொடரானது, பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாதது.
2018-ம் ஆண்டுக்கான 11-வது சீசன் ஐ.பி.எல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இத்தொடரில், பங்கேற்கும் அணிகளில் விளையாட இருக்கும் வீரர்களுக்கான ஏலம் வரும் ஜனவரி 27 மற்றும் 28-ம் தேதிகளில் பெங்களூரில் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை பி.சி.சி.ஐ இன்று வெளியிட்டுள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெறும் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 60 கோடிக்கு வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில் அதிகபட்சமாக 80 கோடி ரூபாய் செலவழித்து 25 பேர் கொண்ட அணியை ஏலத்தில் எடுக்கலாம். இந்த தொகை கடந்த ஆண்டு 66 கோடி ரூபாயிலிருந்து 80 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் கௌதம் கம்பிர் ஐ.பி.எல் பற்றி பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது,
நான் தற்போது வரை கொல்கத்தா அணி நிர்வாகித்துடன் பேசவே இல்லை. அவர்களும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக உள்ளதும் இதனால் கொல்கத்தா அணியில் எனக்கே இடம் இருக்குமா என தெரியவில்லை. அந்த அணிக்கு என்னால் முடிந்ததை நிறைய செய்திருக்கிறேன்.எப்படியும் எதுவும் சரியாக வேலை செய்யாத பட்சத்தில் அந்த அணியில் இருந்து நல்ல முறையில் வெளியேறுவது சிறந்தது. நான் தற்போது எந்த அணிக்கும் ஆட தயாராக உள்ளேன்.
முன்னதாக டெல்லி அணிக்கு ஆட விருப்பம் தெரிவித்திருந்தார் கம்பிர்.
இதனால் கிட்டத்தட்ட கௌதம் கம்பிரை அணியில் தக்க வைக்க போவதில்லை என தெரிகிறது.
அதே போல இரண்டு வெளிநாட்டு வீரர்களை தக்க வைக்க கிட்டத்தட்ட முடிவு செய்துள்ளது கொல்கத்தா அணி. இரண்டு வீரர்களும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்தவர்கலே.
ஒன்று சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன். இவரால் ஓப்பனிங் பேட்டிங் இறங்கி ஆல் ரவுண்டராகவும் செயல்பட முடியும். சென்ற ஐ.பி.எல் தொடரில் 10 விக்கெட் எடுத்துள்ளார். அதேபோல் 225 ரன் குவித்துள்ளார். இவரை தக்க வைத்தால் ₹ 12.5 கோடி காலியாகிவிடும்.
மற்ரோர் வீரர் ஆன்டரு ரஸல். இவர் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஆவார்.