ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (மே 22) இரவு 7 மணியளவில் நடைபெறும் முதல் குவாலிஃபயர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னைசூப்பர் கிங்க்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஹைதராபாத் அணி இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக செயல்பட்டு சிறந்த அணியாகத் திகழ்கிறது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சிறந்த பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ள அந்த அணி, சிறந்த பந்துவீச்சு அணியாகவும் திகழ்கிறது. எனவே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு ஹைதராபாத் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஹைதராபாத்தின் உத்தேச அணி
- ஷிகர் தவான்
சமீப காலமாக தொடந்து மாஸ் காட்டி சூப்பர் பார்மில் உள்ள ஷிகர் தவானே வழக்கம் போல் ஹைதரபாத் அணியின் துவக்க வீரராக களமிறங்குவார். ஒவ்வொரு போட்டியிலும் இவரை சமாளிப்பதே எதிரணிகளுக்கு நெருக்கடியை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
2.ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி
கடந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடிய இவர், இன்றைய போட்டியிலும் விளையாடுவார் என எதிர்ப்பார்க்கலாம்.
3.கேன் வில்லியம்சன்
டேவிட் வார்னர் விலகியதால் ஹைதரபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட கேன் வில்லியம்சனுக்கு இந்த தொடரில் கூடுதல் பொறுப்பு உள்ளது. பொறுப்பை உணர்ந்து வில்லியம்சன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
4.மணிஷ் பாண்டே
இந்திய டி.20 அணியில் மிடில் ஆர்டரில் தனது பங்களிப்பை மிகச்சரியாக செய்து வரும் மணிஷ் பாண்டே ஐ.பி.எல் தொடரிலும் சிறப்பாக விளையாடினால் ஹைதராபாத் அணிக்கு கூடுதல் பலமே.
5.ஷகிப் அல் ஹசன்
ஆல் ரவுண்டரான இவர், ஹைதராபாத் அணிக்கு தனது சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
6.யூசுப் பதான்
அதிரடி வீரரான இவர், தனது அதிரடியை தொடரும்பட்சத்தில் எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
7.அலெக்ஸ் ஹேல்ஸ்
அதிரடியாக விளையாடி வரும் இவர், தனது அதிரடியை தொடரும்பட்சத்தில் எதிரணிக்கு நெருக்கடி ஏற்படும்.
8.ரசீத் கான்
ஹைதரபாத் அணியின் மிகப்பெரும் பலமே இவர் தான் என்று சொல்லும் அளவிற்கு சமீப காலமாக தொடர்ந்து அபாரமாக விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் வீரர் ரசீத் கானின் மாயாஜால சூழல் இந்த முறையும் ஹைதராபாத் அணிக்கு கை கொடுத்தால் எதிரணிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்படும்.
9.சித்தார்த் கவுல்
இந்திய அணியில் அவ்வப்போது தலை காட்டி வரும் சித்தார்த் கவுல் இந்த தொடரை சரியாக பயன்படுத்தி கொள்ளும் பட்சத்தில் இந்திய அணியிலும் தனக்கான நிரந்தர இடத்தை பிடிக்கலாம். இதுவரை இவர் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.
10.புவனேஸ்வர் குமார்
ஹைதராபாத் அணியின் முக்கிய பந்துவீச்சாளரான இவர், இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டால் அது நிச்சயம் எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
- சந்தீப் ஷர்மா
சிறப்பாக செயல்பட்டு வரும் இவர், இன்றைய போட்டியிலும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்ப்பார்க்கலாம்.