அடுத்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஏலம் பரபரப்பாக இருக்கும். 2008-இல் நடந்த முதல் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஏலத்தை விட இந்த ஏலம் பெரியதாக இருக்கும். இந்தியன் பிரீமியர் லீக் அணிகளுடன் பல வீரர்களின் ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. ஒரு அணி அதிகபட்சமாக ஐந்து வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் என முடிவு செய்தார்கள். இதனால், மற்ற வீரர்கள் அனைவரும் 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் செல்வார்கள். இந்நிலையில், 2016ஆம் ஆண்டு கோப்பையை வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி எந்த ஐந்து வீரர்களை தக்கவைத்து கொள்வார்கள் என பார்க்கலாம்.
டேவிட் வார்னர்
இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்திற்கு முன்பு ஒரு அணி ஒரு வீரரை மட்டுமே தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற நிலை வந்தால், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி கண்டிப்பாக டேவிட் வார்னரை தான் தக்கவைத்து கொள்ளும். அவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஐந்து வருடம் விளையாடிய பிறகு, 2014-இல் ஐதராபாத் அணியில் இணைந்து கேப்டனாக பொறுப்பேற்றார்.
அவரது தலைமையில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2016இல் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கோப்பையை வென்று அசத்தியது. அவர் கடந்த ஐந்து சீசன்களாக சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த சீசனில் 14 போட்டியில் விளையாடிய வார்னர் 641 ரன் அடித்திருக்கிறார்.
ஷிகர் தவான்
டேவிட் வார்னருக்கு பிறகு சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் மிக பெரிய சொத்தே ஷிகர் தவான். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மட்டும் இல்லாமல் இந்திய அணிக்கு தவான் சிறப்பாக விளையாடி வருகிறார்.
அனைத்து போட்டிகளிலும் ஐதராபாத் அணிக்காக சிறந்த தொடக்கம் தருகிறார் தவான். இதனால், இவரை விட்டுவிடலாம் என்று ஐதராபாத் அணி ஒருபோதும் நினைக்காது. கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய ஷிகர் தவான் 479 ரன் அடித்துள்ளார்.
புவனேஸ்வர் குமார்
2016இல் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும் ஒரு காரணம் என்று தான் சொல்லவேண்டும். தொடக்கத்தில் எதிரணியின் தொடக்கவீரர்களை துவம்சம் செய்வது மட்டும் இல்லாமல், தேவையான நேரங்களில் விக்கெட்டையும் எடுத்து தரும் வல்லமை படைத்தவர் புவனேஸ்வர் குமார்.
கடந்த நான்கு சீசன்களில் 20, 18, 23 மற்றும் 26 விக்கெட்டுகளை எடுத்து வருகிறார் புவனேஸ்வர். இதனால், எதிர்காலத்தில் இந்த அணியின் பந்துவீச்சை பலப்படுத்த புவனேஸ்வர் குமாரை தக்கவைத்து கொள்வார்கள்.
யுவராஜ் சிங்
இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் 2016ஆம் ஆண்டு முதல் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். அதற்கு முன்பு அவர் பஞ்சாப், புனே, பெங்களூரு, டெல்லி போன்ற அணிகளுக்கும் அவர் விளையாடி இருக்கிறார். 2016ஆம் ஆண்டில் தொடக்கத்தில் காயம் காரணமாக விளையாடாத அவர், பிறகு கம்-பேக் கொடுத்து ஐபில் கோப்பையில் வெல்ல உதவி செய்தார்.
அவரது திறமையே அதிரடியாக விளையாடி ரன் சேர்த்து, முக்கிய விக்கெட்டுகளை எடுப்பதுதான். 2016ஆம் ஆண்டு மற்றும் 2017ஆம் ஆண்டில் ஐதராபாத் அணிக்காக சில முக்கிய இன்னிங்க்ஸை விளையாடி இருக்கிறார். இதனால், அவரை கண்டிப்பாக ஐதராபாத் அணி தக்கவைத்து கொள்ளும்.
மொய்சஸ் ஹென்றிக்ஸ்
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் கேப்டன் டேவிட் வார்னருடன் சேர்ந்து 2016ஆம் ஆண்டு ஐபில் கோப்பையை வெல்ல உதவி செய்தார் மொய்சஸ் ஹென்றிக்ஸ். விக்கெட் விழும் சமயத்தில் பொறுமையாக விளையாடும் அவர், ரன் தேவை படும் போது அடித்தும் விளையாடி, இக்கட்டானா சூழ்நிலையில் விக்கெட் எடுத்தும் அவரது அணிக்கு வெற்றியை தேடி தருவார்.
கடந்த நான்கு சீசனாக இந்தியன் பிரீமியர் லீக்கில் ஐதராபாத் அணிக்காக விளையாடும் அவர் ஒவ்வொரு சீசனிலும் 200 ரன்னுக்கு அடித்து 10 அல்லது 12 விக்கெட் எடுக்கிறார். இதனால், இவரை அடுத்த ஐபில் தொடருக்கு வெளியே விடுவது கடினம் தான்.