கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி நாளை மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இரண்டுமே சென்ற முறை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா அணி மூன்றாவது இடத்தை பிடித்தது.
இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முக்கியமான வீரர்கள் அனைவரையும் தக்கவைத்துள்ளது. மேலும் டேவிட் வார்னர் அந்த அணிக்குள் திரும்பி வந்துள்ளா.ர் அந்த அணியின் கேன் வில்லியம்சன் இன்னும் ஐபிஎல் தொடருக்கு வந்து சேராததால் நாளைய போட்டியில் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கேப்டனாக இருப்பார் என்று தெரிகிறது.
ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பின்னும் தடைகாலம் முடியவில்லை. இதனால் அவர் பயிற்சி மட்டுமே செய்து வருகிறார். கொல்கத்தா அணி இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. அந்த அணியில் பல முக்கியமான வீரர்கள் உள்ளனர். தினேஷ் கார்த்திக் இந்த முறையும் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் சிவம் மாவி மற்றும் கமலேஷ் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறியுள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
ஜானி பேர்ஸ்டோ
இவர் இங்கிலாந்தின் அதிரடி துவக்க வீரர் ஆவார்
விருத்திமான் சகா
இவர் இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்
மார்டின் கப்டில்
ஆவார் இவர் நியூசிலாந்தின் அதிரடி துவக்க வீரர் ஆவார்
ஷகிப் அல் ஹசன்,
இவர் வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஆவார்
மனிஷ் பாண்டே
இவர் இந்திய அணியின் அற்புதமான பேட்ஸ்மேன் ஆவார்
விஜய் ஷங்கர்
சமீபகாலமாக அற்புதமாக ஆடி வரும் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் இவர்
யூசுப் பதான்
இவர் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் ஆவார்
ரஷிட் கான்
இவர் அற்புதமான சுழற்பந்து வீச்சு திறமையுடன் கூடிய ஆல்ரவுண்டர் ஆவார்
புவனேஸ்வர் குமார்
இவர் அற்புதமான வேகப்பந்து வீச்சாளர் ஆவார்
சித்தார்த் கவுல்,
இவர் அற்புதமான வேகப்பந்து வீச்சாளர் ஆவார்