மூன்று வீரர்கள் அதிரடி நீக்கம்; முதலில் பேட்டிங் செய்கிறது டெல்லி அணி !! 1

பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

மூன்று வீரர்கள் அதிரடி நீக்கம்; முதலில் பேட்டிங் செய்கிறது டெல்லி அணி !! 2

இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணி மூன்று மாற்றங்களுடன் களமிறங்க உள்ளது. காயம் காரணமாக கடந்த போட்டிகளில் விளையாடாத ரிஷப் பண்ட் இன்றைய போட்டிக்கான அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார், இதனால் அலெக்ஸ் கேரி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதே போல் சிம்ரன் ஹெய்ட்மர் மற்றும் டேனியல் சம்ஸ் ஆகியோரும் இன்றைய போட்டிக்கான டெல்லி அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மூன்று வீரர்கள் அதிரடி நீக்கம்; முதலில் பேட்டிங் செய்கிறது டெல்லி அணி !! 3

அதே போல் இன்றைய போட்டிக்கான பஞ்சாப் அணியும் ஒரு மாற்றத்துடன் களமிறங்கி உள்ளது, கிரிஸ் ஜோட்ரனுக்கு பதிலாக ஜேம்ஸ் நீஷம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணி;

ப்ரிதிவி ஷா, ஷிகர் தவா ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சிம்ரன் ஹெய்ட்மர், டேனியல் சாம்ஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்‌ஷர் பட்டேல், ரவிச்சந்திர அஸ்வின், துசார் தேஸ்பண்டே, காகிசோ ரபாடா.

இன்றைய போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி;

கே.எல் ராகுல், மாயன்க் அகர்வால், கிரிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரண், கிளன் மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, ஜேம்ஸ் நீஷம், முருகன் அஸ்வின், முகமது ஷமி, ரவி பிஸ்னோய், அர்ஸ்தீப் சிங்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *