ஏபி டிவில்லியர்ஸ் மாற்று வீரராக இந்த மூன்று வீரர்களில் ஒருவர் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு தேர்வாகுவார்கள்.
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், அனைத்து அணிகளும் எந்த வீரரை தக்கவைத்து கொள்ளலாம்..?எந்த வீரரை அணியிலிருந்து நீக்கலாம்..? எந்த புதிய வீரர்களை அணியில் இணைக்கலாம்…? என்ற திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்து வருகிறது.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரராக செயல்பட்ட ஏபி டிவில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் தொடர்களிலும் இருந்து ஓய்வு அறிவிப்பதாக அறிவித்துவிட்டார் இதன் காரணமாக பெங்களூரு அணி அவருக்கு பதில் ஒரு தகுதியான வீரரை தனது அணியில் தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஏபிடி வில்லியர்ஸ்க்கு மாற்று வீரராக இந்த மூன்று வீரர்கள் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு சரியான தேர்வாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அப்படிப்பட்ட மூன்று வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
எய்டன் மார்க்ரம்
சவுத் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் எய்டன் மார்க்ரம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ்க்கு மாற்று வீரராக செயல்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் நடந்து முடிந்த 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 119 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.