ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடரில் வரலாறு காணாத தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது.
ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 4 போட்டியில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. 15 வருட ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு முறை, தனது முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்து இல்லை, ஆனால் இந்த முறை சென்னை அணி தொடர்ச்சியாக நான்கு போட்டியிலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது.
சென்னை அணியின் தொடர் தோல்விகளுக்கு சரியான பந்துவீச்சாளர்கள் இல்லாததே முக்கியமான காரணமாகவே பார்க்கபப்டுவதால், காயத்தில் இருந்து தீபக் சாஹர் குணமடைந்து வந்துவிட்டால் அனைத்து பிரச்சனைகளையும் சரியாகிவிடும் என ரசிகர்கள் கடைசி நம்பிக்கையுடன் காத்திருந்த நிலையில், சென்னை ரசிகர்களின் கடைசி நம்பிக்கையும் பொய்த்துப்போகக்கூடிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாத தீபக் சாஹர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற தீபக் சாஹர், அங்கு சிகிச்சை மற்றும் முறையான வலைப் பயிற்சிகளை மேற்கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக முதுகிலும் அவருக்கு புதிதாக காயம் ஏற்பட்டது. இதனால், குறைந்தது 4 மாதங்கள் அவரால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,இதான் இவர் எதிர்வரும்2022 உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்று அறியப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் தீபக் சஹருக்கு பதில் சென்னை அணி தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ள 3 வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து இங்கு காண்போம்.