சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
15வது ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. கைரன் பொலார்ட் மற்றும் முருகன் அஸ்வின் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஸ்டப்ஸ் மற்றும் சோகீன் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதே வேளையில், இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இந்த போட்டிக்கான சென்னை அணியின் ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆடும் லெவன்;
ரோஹித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, திரிஸ்டன் ஸ்டப்ஸ், ரமன்தீப் சிங், டிம் டேவிட், டேனியல் சம்ஸ், குமார் கார்த்திகேயா, ஹிர்திக் சோகீன், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், ரிலே மெரிடித்.
சென்னை அணியின் ஆடும் லெவன்;
ருத்துராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயூடு, மொய்ன் அலி, சிவம் துபே, தோனி, டூவைன் பிராவோ, மகேஷ் தீக்ஷன்னா, சிம்ரஜித் சிங், முகேஷ் சவுத்ரி.