2023 ஐபிஎல் தொடருக்கான பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி தான் செயல் படுவார்; ரகசியத்தை போட்டு உடைத்த இந்திய வீரர் !! 1

2023 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலி பொறுப்பேற்பார் என்று அனுபவ வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

தனது அணிக்கு கோப்பை வென்று கொடுக்க முடியவில்லை என்பதாலும் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்பதாலும் 2021 ஐபிஎல் தொடருக்கு பின் பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்க மாட்டேன் என்றும், ஐபிஎல் தொடரில் விளையாடும் வரை பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடுவேன் என்றும் விராட் கோலி தெரிவித்திருந்தார்.

2023 ஐபிஎல் தொடருக்கான பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி தான் செயல் படுவார்; ரகசியத்தை போட்டு உடைத்த இந்திய வீரர் !! 2

இதன் காரணமாக பெங்களூர் அணி 2022 ஐபிஎல் தொடருக்கான தனது அணியில் சென்னை அணியின் அதிரடி வீரர் டுப்லசிசை ஏலத்தில் தேர்ந்தெடுத்து அணியின் கேப்டன் ஆக்கியது.

தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டூப்லசிஸை தனது அணியின் கேப்டனாக மாற்றிய முடிவு மிகச் சிறந்தது என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பெங்களூர் அணியை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவி அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பெங்களூரு அணியின் கேப்டன் குறித்து பேசியுள்ளார்.

2023 ஐபிஎல் தொடருக்கான பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி தான் செயல் படுவார்; ரகசியத்தை போட்டு உடைத்த இந்திய வீரர் !! 3

அதில் பேசிய அவர், பெங்களூர் அணி டூப்லசிஸை கேப்டனாக நியமித்து ஒரு சிறந்த முடிவை எடுத்துள்ளது, டூப்லசிஸ் அனுபவம் வாய்ந்த ஒரு சிறந்த வீரர் ,இவருடையமுடிவு கிட்டத்தட்ட தோனியின் முடிவு போன்று ஒத்திருக்கும், ஆனால் டூப்லசிஸ் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் தான் ஐபிஎல் தொடரில் விளையாடுவார். அதற்கு பின் இவர் விளையாடுவது சந்தேகம் தான் என்று அஸ்வின் அதில் பேசியிருந்தார்.

மேலும் விராட் கோலி குறித்த பேசி அஸ்வின்,2023 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு மீண்டும் விராட் கோலி கேப்டனாக ஆவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது, கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்ஷிப்பில் நெருக்கடியை சந்தித்ததால் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார், அவருக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது அதற்கு பின் மீண்டும் பெங்களூர் அணிக்கு கேப்டனாக பயணிப்பார் என்று ரவி அஸ்வின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *