தோனி
சென்னை அணியின் அடுத்த கேப்டன் தோனியுடன் பயணித்தவராக மட்டுமே இருக்க முடியும் ; வெளிப்படையாக பேசிய ஹர்பஜன்சிங்..

தற்போதைய நிலையிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தான் சிறந்த கேப்டன் என்று இந்திய அணியின் முன்னாள் சிலர் பங்குவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடருக்கான பேச்சு ஓயத் துவங்கிய நிலையில், டிசம்பர் மாதம் நடைபெற உள்ள 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் குறித்த கருத்துக்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

சென்னை அணி

ஒவ்வொரு அணியும் தனக்குத் தேவையில்லாத வீரர்களை விடுவித்துவிட்டு, தனது அணிக்கு உகந்த வீரர்களை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், சென்னை அணி நேற்று பிராவோ,கிரிஸ் ஜோடன் மற்றும் ஆடம் மில்னே உள்ளிட்ட எட்டு வீரர்களை விடுவித்துள்ளது.

இதனால் சென்னை அணி எந்த வீரர்களை தேர்ந்தெடுக்கும் என்பது குறித்த கருத்துக்கள் முன்னால் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இது ஒரு புறமிருந்தாலும் 2023 ஐபிஎல் தொடரோடு சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்து விடுவார் என்பதால், சென்னை அணியை தலைமை தாங்கி வழிநடத்தக் கூடிய ஒரு வீரரை சென்னை அணி தேர்ந்தெடுக்குமா என்ற பேச்சும் கிரிக்கெட் வட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.

சென்னை அணி

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கூடிய விரைவில் தோனிக்கு நிகரான ஒரு கேப்டனை கண்டுபிடிக்கும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் தெரிவித்ததாவது, “சென்னை அணி அதிகம் வேலை செய்து பல கட்டமைப்புகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது, தோனி சிறந்த சாதனைகளை புரிந்து, பல முயற்சிகளை செய்து சென்னை அணியை கட்டமைத்துள்ளார்.. தற்பொழுதும் அவர்தான் சிறந்த கேப்டன், நிச்சயம் அவரைப் போன்ற சிறந்த தலைமைத்துவ பண்பை மற்ற கேப்டன்களிடம் காண முடியாது, நிச்சயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனிக்கு பதில் ஒரு மாற்று கேப்டனை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது, அவர் தோனியுடன் பயணித்தவராக இருக்க வேண்டும், மேலும் அணியை வழிநடத்தக் கூடியவராகவும் இருக்க வேண்டும். ஏற்கனவே ரவீந்திர ஜடேஜா அணியை வழிநடத்த முயற்சி செய்து தோல்வி தழுவியதை நாம் பார்த்துள்ளோம். இனிமேலும் அவரை கேப்டன் ஆக்குவார்களா என்பது குறித்து நமக்கு தெரியாது, ஆனால் நிச்சயம் ஜடேஜா மிகச்சிறந்த கம்பேக்கை கொடுப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது, தற்பொழுது பிராவோ மற்றும் தோனி ஆகியவரின் இடம் காலியாக உள்ளதால் அவர்களுக்கு பதில் ஒரு நல்ல ஃபினிஷரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டத்தில் சென்னை அணி தள்ளப்பட்டுள்ளது,சாம் கரன், கிரீன் போன்ற வீரர்கள் ஏலத்தில் இருப்பதால் நிச்சயம் சென்னை அணி அவர்களை தேர்ந்தெடுக்க முயற்சி செய்யும் என கருதுகிறேன்” என்று ஹர்பஜன்சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *