அது என்னமோ தெரியல... மும்பை இந்தியன்ஸ் கூட போட்டினா மட்டும் ஒரு புது எனர்ஜி வந்திடுது; ஓபனாக பேசிய சென்னை வீரர் !! 1

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனி கவனம் செலுத்தி விளையாடுவேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான தொடர் கடந்த மார்ச் மாத இறுதியில் துவங்கி மே மாத இறுதி வரை நடைபெற்றது. இதில் ஐபிஎல் தொடருக்கு புதிய அணியான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, தனது முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

சீனியர் வீரர்களை விட இளம் வீரர்களின் ஆதிக்கமே இந்த தொடரில் அதிகமாக இருந்தது. இதன் மூலம் பல இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் உலகின் வெளிச்சம் கிடைத்தது. உம்ரன் மாலிக், முகேஷ் சவுத்ரி அர்ஸ்தீப் சிங் போன்ற சில வீரர்கள் இந்த தொடரின் மூலம் இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

 

அது என்னமோ தெரியல... மும்பை இந்தியன்ஸ் கூட போட்டினா மட்டும் ஒரு புது எனர்ஜி வந்திடுது; ஓபனாக பேசிய சென்னை வீரர் !! 2

ஐபிஎல் தொடர் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் நிறைவடைந்துவிட்டாலும் ஐபிஎல் தொடர் குறித்தான விவாதங்களும், பேச்சுக்களும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் இந்த தொடரில் பங்கேற்ற வீரர்கள் இந்த தொடரின் மூலம் தங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

அந்தவகையில், நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் குறித்தும், தான் சென்னை அணியில் தேர்வானது குறித்தும்,மும்பை அணிக்கு எதிரான போட்டி குறித்தும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாக பேசியுள்ளார்.அது என்னமோ தெரியல... மும்பை இந்தியன்ஸ் கூட போட்டினா மட்டும் ஒரு புது எனர்ஜி வந்திடுது; ஓபனாக பேசிய சென்னை வீரர் !! 3

இதுகுறித்து முகேஷ் சவுத்ரி பேசுகையில், சென்னை அணி என்னை தேர்வு செய்த பொழுது, என்னிடம் ஏதோ தனித்துவமான திறமை உள்ளது என்பதை உணர்ந்தேன், அதற்காக தான் அவர்கள் என்னை தேர்வு செய்கிறார்கள் என்று தோன்றியது, ஆனால் முதல் இரண்டு போட்டியில் என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. என்ன தவறு என்பது தெரியாமல் குழம்பி போய் இருந்தேன், இனிமேல் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியாமல் இருந்தது, அப்பொழுது தான் சென்னை அணியின் பயிற்சியாளர் மற்றும் நிர்வாகிகள் எனக்கு ஆதரவாக இருந்து அடுத்த போட்டியில் வாய்ப்பளித்தனர் என்று முகேஷ் சவுத்ரி பேசியிருந்தார்.

மேலும் மும்பை அணிக்கு எதிரான போட்டி குறித்து பேசிய முகேஷ்,மும்பை அணிக்கு எதிரான போட்டியில் நான் கூடுதல் கவனமாக செயல்பட்டேன், நான் அந்த போட்டியில் என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கருதினேன், அதேபோன்று எப்படி பந்து வீச வேண்டும் என்று ஒரு திட்டத்தையும் தீட்டி அதை சிறப்பாக செயல்படுத்தினேன், அப்பொழுது அது என்னால் முடியும் என்று தோன்றியது.அது என்னமோ தெரியல... மும்பை இந்தியன்ஸ் கூட போட்டினா மட்டும் ஒரு புது எனர்ஜி வந்திடுது; ஓபனாக பேசிய சென்னை வீரர் !! 4

மேலும் தன்னுடைய மோசமான பீல்டிங் குறித்து பேசிய முகேஷ் சவுத்ரி, முதல் கேட்ச்சை நான் விட்ட பொழுது நான் மிகவும் நெருக்கடியை உணர்ந்தேன், அதன் காரணமாக அடுத்து கேட்ச்சை விட்டேன், இதனால் இன்னும் கூடுதல் நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது, அது ஒரு சவாலான போட்டி ஆனால் அணியின் கேப்டன் எனக்கு ஆதரவாகவும் வழிகாட்டியாகவும் இருந்தார், உண்மையில் நான் ஒரு நல்ல பீல்டர் ஆனால் நெருக்கடி தவறுகளை செய்வதற்கு வழிவகுத்தது என்றும் முகேஷ் சவுத்ரி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *