இங்கிலாந்து செல்ல இருக்கும் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு இஷான் கிஷான் சேர்க்கப்பட்டார். சஞ்சு சாம்சன் யோ-யோ உடற்தகுதி பரிசோதனையில் தேர்ச்சி பெற தவறியதால் நீக்கம்.
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முன்பாக, முத்தரப்பு பயிர்ச்சி ஆட்டம் நடக்க உள்ளது. இதில் இந்தியா ஏ, இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகள் மோதுகின்றன.
இங்கிலாந்து செல்வதற்கு முன்பாக, வீரர்களுக்கு யோ-யோ உடற்தகுதி பரிசோதனை பெங்களூருவில் நடத்தப்பட்டது. இதில் வீரர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என பிசிசிஐ நிர்வாகம் அறிவித்தது. இதில் தேர்ச்சி பெறவிதை எனில் அணியில் இடம் பெற இயலாது எனவும் தெரிவித்தது.
பெங்களூருவில் நடந்த பரிசோதனையில், சஞ்சு சாம்சன் நிர்ணயித்த மதிப்பெண்ணை பெறவில்லை. இதனால் உடனடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவைப்பட்ட நிலையில், அண்டர் 19 உலகக்கோப்பை அணியின் முன்னாள் கேப்டன் இஷான் கிஷான் அணியில் சேர்க்கப்பட்டார்.
மேலும், ஆப்கானிஸ்தான் அணிகேஷிரான டெஸ்ட் போட்டியில் இருந்து முஹமத் சமி நீக்கப்பட்டார். இவரும் யோ-யோ உடற்தகுதி பரிசோதனையில் தேர்ச்சி பெறவில்லை. சமி க்கு பதிலாக, ரஞ்சி கோப்பையில் சிறப்பாக ஆடிய நவதீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.