ஹைதராபாத் vs டெல்லி; டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது ஹைதராபாத்
ஐ.பி.எல் டி.20 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
முதலில் டெல்லி அணிக்கு தவான் மற்றும் ஷா களமிறங்கி நல்ல துவக்கம் கொடுக்க தவறினர். ஆனால் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி 43 ரன்கள் அடித்து சற்று ஆறுதல் கொடுத்தார்.
பின்னர் வந்த அனைவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சியளித்தனர். ஹைதராபாத் அணிக்கு புவனேஸ்வர் குமார், நபி மற்றும் கவுல் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
டெல்லி அணிக்கு நடுகள ஆட்டக்காரர்கள் வழக்கம் போல சொதப்ப அணி சற்று தடுமாறியது. பந்துக்கு பந்து ரன் எடுக்கவே தடுமாறியது.
கடைசியில் அக்சர் படேல் சற்று ஆறுதல் கொடுக்கும் விதமாக, இறுதி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஹைதராபாத் அணி 130 என்ற எளிதான இலக்கை துரத்தி வருகிறது.
பின்னர் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு மீண்டும் சிறப்பான துவக்கத்தை கொடுத்தது வார்னர் மற்றும் பார்ஸ்டோவ் ஜோடி. அதிரடியாக ஆடி 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் பைர்ஸ்டோவ்,
அடுத்ததாக வார்னேர் 10 ரன்களுக்கு வெளியேறினார். விஜய் சங்கர், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா என மூவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேற ஹைதராபாத் அணி பதட்டம் கண்டது.
இறுதியில் நபி நின்று அடிக்க 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைட்ரபாத் வென்றது.
ஆட்டநாயகனாக பைர்ஸ்டோவ் தேர்வு செய்யப்பட்டார். அவர் கூறியதாவது, ஹைதராபாத்தில் இருந்ததை விட சற்றே குறைவான பவுன்ஸ் இருந்தது, அது சுருதியின் துணி மற்றும் கண்ணீரைப் பார்க்க முடிந்தது. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று நீங்கள் தெரிந்து கொண்டதால், இரண்டாவது பேட் செய்ய நல்லது என்று தோன்றுகிறது. பந்துவீச்சாளர்கள் பந்து வீச்சில் இருக்கும்போது, இந்த எல்லைகள் குறுகியதாகவும், எந்தப் பகுதியிலிருந்து திரும்பினாலும் அவை உங்களுக்குத் தெரிவிக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் பந்துவீச்சாளர்கள் இரு தரப்பிலும் வித்தியாசமாக உள்ளனர் – எங்கள் தோழர்கள் குறுகியவர்களாவர், அவர்கள் மிக உயரமான தோழர்களே உள்ளனர், எனவே நீங்கள் நிலைமையை மட்டும்தான் பிரதிபலிக்க முடியும். ஆரம்பத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம், நாங்கள் விரைவாக தொடர்ந்து மூன்று போட்டிகளைக் கொண்டுள்ளோம், நாங்கள் விளையாடும் கிரிக்கெட்டின் கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாட வேண்டும். நாம் பக்கத்தில் உள்ள தோழர்களால் ஒரு பெரிய குழுவினர் மற்றும் அனைவருமே அதே பாணியில் விளையாடுகிறோம்..