நீங்க பண்ண தவறுக்கு இது ஒரு சாக்கு ; இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்த கெவின் பீட்டர்சன் ! 1

இந்தியா மற்றும் இங்கிலாந்து  இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக  நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் வெறும் 112 ரன்கள் மட்டுமே குவித்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 145 ரன்கள் குவித்து 33 ரன்கள் மட்டுமே முன்னிலை வகித்தது.

இதன் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி  30 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் இந்திய அணிக்கு 47 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகச்சிறிய இலக்கு கிடைத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 7.4  ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. இதன் மூலம் இந்திய அணி 2 – 1 என்று முன்னிலை வைத்திருக்கிறது.

நீங்க பண்ண தவறுக்கு இது ஒரு சாக்கு ; இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்த கெவின் பீட்டர்சன் ! 2

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டே நாளில் முடிவடைந்துள்ளதாலும் பேட்ஸ்மன்கள் பேட்டிங்கில் திணறியதாலும் பல்வேறு விமர்சனங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து முன்னாள் வீரர்கள், வல்லுநர்கள் என அனைவரும் கருத்து தெறிவித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து அணி தோல்வி அடைந்ததற்கு பிட்ச் தான் முக்கிய காரணம் என்று கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கெவின் பீட்டர்சன் பேசியிருக்கிறார். கெவின் பீட்டர்சன்  கூறுகையில் “ பகலிரவு போட்டி நடைபெற்ற பிட்ச் நன்றாக தான் உள்ளது. இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடினார்கள்.  இது ஒவ்வொரு பேட்ஸ்மேன்களின் மனசாட்சிக்கு தெரியும். 

நீங்க பண்ண தவறுக்கு இது ஒரு சாக்கு ; இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்த கெவின் பீட்டர்சன் ! 3

இந்த போட்டியில் வீழ்த்தப்பட்ட 30 விக்கெட்டில் 21 விக்கெட்டுகள் நேராக வந்த பந்தில் வீழ்த்தப்பட்டது. பந்தில் சிறிதளவு தீர்ப்பும் கூட ஏற்படவில்லை. பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் தான் 3 அல்லது 4 நாட்களில் முடிய வேண்டிய இந்தப் போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்து இருக்கிறது” என்று தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *