கெத்து காட்டலாம் வாங்க அஸ்வின்; கே.எல் ராகுல் வாழ்த்து
ஐ.பி.எல் தொடரின் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அஸ்வினுக்கு, கே.எல் ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரின் 11வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது
இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை கோடிகளை குவித்து எடுத்து கொண்டன.
ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு விதத்தில் பலம் பெற்று ஐ.பி.எல் தொடரில் சாதிக்க காத்துள்ள நிலையில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணி கேப்டனுக்கு பதவிக்கு சரியான ஆள் இல்லாமல் தவித்து வந்தது.
முதலில் கேப்டனை அறிவிக்கப்ப போவது கொல்கத்தா அணியா இல்லை பஞ்சாப் அணியா என்ற கேள்வி கடந்த சில தினங்களாகவே எழுந்து வந்த நிலையில், இந்த ரேஸில் முந்திய பஞ்சாப் அணி, இன்று தமிழக வீரர் அஸ்வினை கேப்டனாக நியமித்து, அதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தது.
ஐ.பி.எல் தொடரில் கேப்டன் அவதாரம் எடுத்துள்ள அஸ்வினுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், பஞ்சாப் அணியின் மற்றொரு வீரரும் இந்திய அணியின் துவக்க வீரருமான கே.எல் ராகுல், ட்விட்டர் பக்கம் மூலம் அஸ்வினுக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
Looking forward to @ashwinravi99 leading the way for @lionsdenkxip in the @IPL this year. Going to be great fun.????♀️#KingOfNorth #LivePunjabiPlayPunjabi https://t.co/ZkurDRPN8P
— K L Rahul (@klrahul11) February 26, 2018
கே.எல் ராகுலின் இந்த ட்வீட்டிற்கு அஸ்வினும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.