நாங்க கிடையாது..,தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம் ; கே எல் ராகுல் வேதனை ! 1

14வது ஐபிஎல் சீசன் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 10 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. 11வது லீக் போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 195 ரன்கள் குவித்தது.

நாங்க கிடையாது..,தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம் ; கே எல் ராகுல் வேதனை ! 2

இதில் தொடக்க வீரர்கள் கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஜோடி சேர்ந்து 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.இவர்களுக்கு பின் களமிறங்கிய கெயில், தீபக் ஹூடா, பூரன், ஷாருக்கான் சிறப்பாக விளையாடி நல்ல முடிவை கொடுத்தனர்.

அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 69 ரன்கள் மற்றும் கே எல் ராகுல் 61 ரன்கள் குவித்து இருக்கிறார்கள். பஞ்சாப் பேட்ஸ்மன்களின் விக்கெட்டை எடுக்க டெல்லி பவுலர்கள் திணறினார்கள். இதில் கிறிஸ் வோக்ஸ், லுக்மா மெரிவாலா, ரபாடா, ஆவேஷ் கான் தலா 1 விக்கெட் எடுத்து இருக்கிறார்கள்.

நாங்க கிடையாது..,தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம் ; கே எல் ராகுல் வேதனை ! 3

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி தங்களது சிறப்பான ஆட்டத்தால் 18.2 ஓவரிலே 198 ரன்கள் எடுத்து தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளனர். இதில் டெல்லி பேட்ஸ்மன்கள் அனைவரும் சிறப்பாக விளையாடி இருந்தார்கள்.

குறிப்பாக ஷிகர் தவான் 92 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். இவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டுள்ளது. பிரித்வி ஷா 32, ஸ்டோய்ன்ஸ் 27, பண்ட் 15, லலித் 12, ஸ்மித் 9 ரன்கள் அடித்திருக்கிறார்கள். டெல்லி பவுலர் ரிச்சர்ட்சன் 2 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

நாங்க கிடையாது..,தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம் ; கே எல் ராகுல் வேதனை ! 4

இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல் “எனது பிறந்தநாளா இன்று வெற்றி பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இது வருத்தமாக தான் இருக்கிறது. ஆனால் இன்னும் நிறைய போட்டிகள் இருக்கிறது. இதில் நாங்கள் மீண்டும் நல்ல பார்முக்கு வந்து பல போட்டிகளில் வெற்றி பெறுவோம். இந்த போட்டியில் 10-15 ரன்கள் குறைவாக தான் இருந்தது. ஆனால் 190 ஒரு நல்ல ஸ்கோர் தான்.

நான் மற்றும் மயங்க் அகர்வால் 180-190 ரன்கள் ஒரு நல்ல ஸ்கோர் என்று நினைத்தோம். ஷிகர் சிறப்பாக விளையாடினார். இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்துவிட்டு இரண்டாவது பவுலிங் செய்வது கடினம். ஏன்னெறால் பனி பந்துவீசுவதற்கு ஒத்துழைக்காது. பவுலர்கள் இதிலும் சிறப்பாக பந்துவீச முயற்சித்து தான் வந்தார்கள். ஆனால் இது ரொம்ப கஷ்டம். இதற்காக நான் நடுவர்களிடம் இரண்டு முறை பந்து மாற்றினால் நல்லா இருக்கும் என்று கூறினேன். ஆனால் விதி முறை இருக்கிறது” என்று கே எல் ராகுல் பேசியிருக்கிறார்.

நாங்க கிடையாது..,தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம் ; கே எல் ராகுல் வேதனை ! 5

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *