2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் தேதி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவிற்கும் இத்தாலியில் திருமணம் நடந்தது. அதன் பிறகு அனைவரும் பேச பட்ட ஜோடியானார்கள். இத்தாலியில் நடந்த அவர்கள் திருமணத்தில் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் தான் கலந்து கொண்டார்கள்.
இந்திய விதி படி அவர்கள் இன்னும் சரியான திருமண சான்றிதழ் வழங்கவில்லை, இதனால் அவர்கள் மீண்டும் இந்தியாவில் திருமணம் செய்ய போகிறார்கள் என தகவல் வந்துள்ளது. அவர்களின் திருமண வரவேற்பு டெல்லி மற்றும் மும்பையில் நடந்தது. திருமண வரவேற்பில் இந்திய வீரர்கள் மற்றும் பாலிவுட் நடிகர், நடிகைகளும் பங்கேற்றனர். இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் விராட் கோலியின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார்.
திருமணம் ஆன புதிய ஜோடி விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் தென்னாப்ரிக்காவிற்கு சென்றனர். இந்திய அணி தற்போது தென்னாபிரிக்கா அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியின் போது மைதானத்தில் இருந்து இந்திய அணியை ஊக்குவித்த அனுஷ்கா சர்மா, ஆனந்த் எல் ராஜ் இயக்கும் ‘ஜீரோ’ படத்தில் நடிக்கிறார். இதனால், இப்படத்தின் பட பிடிப்பை தொடங்க இந்தியாவிற்கு திரும்பினார் அனுஷ்கா ஷர்மா.
அதே நேரத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்திய அணிக்காக விளையாட தென்னாப்ரிக்காவிலேயே இருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் 5 மற்றும் 28 ரன்கள் மட்டுமே அடித்து ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி, அடுத்து வரும் போட்டிகளில் ரன் அடித்து அசத்துவார் என்று எதிர்பார்க்க படுகிறது.