14வது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலத்தில் இலங்கை வீரர்கள் ஒருவர் கூட தேர்வு செயாதது குறித்து இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககரா கருத்து தெரிவித்திருக்கிறார்.
2008ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் தற்போது வரை 13 சீசன்கள் முடிவடைந்துள்ளது. 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் 14வது ஐபிஎல் சீசன் ஏப்ரல்/மே மாதம் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 14வது ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஐபிஎல் போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிசிசிஐ தலைவர் கங்குலி இதற்கான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் கிறிஸ் மோரிஸ் -16.25 கோடி, கைல் ஜாமிசன் – 15 கோடி, ஜெய் ரிச்சர்ட்ஸன் – 14 கோடி, மெரிடித் – 8 கோடி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விலைக்கு எடுக்கப்பட்டார்கள். ஆனால் ஆரோன் பின்ச் போன்ற அனுபவ வீரர்கள் பலர் எந்த அணியிலும் இடம் பெறவில்லை. இதுபோக சில வீரர்கள் டிரேடிங் மூலம் இரு அணிகளுக்கிடையே மாற்றப்பட்டிருக்கின்றனர்.
கடந்த சீசனில் விளையாடிய இசுரு உடானா, திசாரா பெரேரா ஆகிய இலங்கை வீரர்கள் ஒருவர் கூட இந்த ஐபிஎல் ஏலத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இலங்கை அணியின் ஜாம்பவானான குமார் சங்ககரா கருத்து தெரிவித்திருக்கிறார்.
குமார் சங்ககரா இதுகுறித்து பேசுகையில் “ இலங்கை அணியின் சிறந்த வீரர்கள் சிலர் ஏலத்தில் இடம் பெற்று இருந்தனர். ஆனால் இலங்கை அணி திடீரென்று சுற்றுப்பயண தொடரில் கமிட்டாகும். இது இலங்கை வீரர்களுக்கு பிறகு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால்தான் இலங்கை வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படவில்லை” என்று கூறியிருக்கிறார்.