சச்சின், சேவாக் இல்லை.. எனக்கு பிடித்த இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; சங்ககாரா சொல்கிறார்
தனக்கு பிடித்த இரண்டு பேட்ஸ்மேன்கள் யார் என்பதை முன்னாள் இலங்கை வீரர் குமார சங்ககாரா ஓபனாக தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் தாக்கம் காரணமாக உலகமும் வீட்டிலேயே முடங்கி போயுள்ளதை போன்று, சில நாட்டு கிரிக்கெட் வீரர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி போயுள்ளனர்.
வீட்டிலேயே முடங்கியுள்ளதால் டைம் பாஸிற்கு சமூக வலைதளங்களில் எப்பொழுதும் அக்டிவாக இருக்கும் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ரசிகர்களுடன் உரையாடியும் வருகின்றனர். தங்களது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து உரையாடுவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகின்றனர்.
அந்த வகையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்ககாரா, கிரிக்கெட் உலகில் தனக்கு பிடித்த இரண்டு பேட்ஸ்மேன்கள் யார் என்பதை ஓபனாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சங்ககாரா பங்கேற்ற உரையாடல் ஒன்றில், சங்ககாராவிடம் அவருக்கு பிடித்தமான இரண்டு பேட்ஸ்மேன்கள் யார் என கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த சங்ககாரா, வி.வி ரிச்சர்ட்ஸ் மற்றும் பிரையன் லாரா என தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் எனது கிரிக்கெட் ஹீரோக்கள், 1996ல் இலங்கை அணி உலக கோப்பையை வென்றபோதுதான், சர்வதேச கிரிக்கெட்டிலும் ஆட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது என்று சங்கக்கரா தெரிவித்துள்ளார்.
சவாலான இரண்டு பந்துவீச்சாளர்கள்;
எதிர்கொண்டதிலேயே சவாலான பந்துவீச்சாளர்கள் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த சங்ககாரா, வாசிம் அக்ரம் மற்றும் ஜாகீர் கான் ஆகிய இருவரும் தான், தான் எதிர்கொண்டதிலேயே மிகக்கடினமான பவுலர்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சங்கக்கரா, வாசிம் அக்ரமை எதிர்கொள்வது கொடுங்கனவு. அதேபோல ஜாகீர் கானை நான் அதிகமுறை எதிர்கொண்டு ஆடியிருக்கிறேன் என்றபோதிலும், அவரது பவுலிங் எப்போதுமே எதிர்கொள்வதற்கு கடினமாக இருக்கும் என்று சங்கக்கரா தெரிவித்துள்ளார்.