முகமது அசாருதீன் – சங்கீத பீஜ்லனி, ஹர்பஜன் சிங் = கீதா பஸ்ரா மற்றும் தற்போது விராட் கோலி – அனுஷ்கா சர்மா – இது போன்ற கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாலிவுட் நடிகை ஜோடிகள் இந்தியாவில் பழைமை ஆகிவிட்டது. கிரிக்கெட் விளையாடி உலகம் முழுவதும் பாராட்ட படும் இந்திய வீரர்கள் ரசிகர்களை மட்டும் அல்லாமல், நடிகைகளையும் கவர்கின்றனர். இதற்கு, இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாலிவுட் நடிகைகளுக்கு இடையேயான இந்த உறவு தான் காரணம்.
பாலிவுட் நடிகை மதுரா டிக்சிடும் அவருடைய 18 வருட பெரியவராக இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் மீது தான் ஒரு கண் வைத்திருந்தாராம். இந்திய நாட கண்ட ஒரு நல்ல நடிகைளில் ஒருவர் தான் மதுரா டிக்சிட். இந்திய கிரிக்கெட் வீரர் மீது இவர் கண் மட்டும் வைக்கவில்லை, தன் இதயத்தையே கொடுத்துவிட்டதாக கூறினார். சமீபத்திய பேட்டியில் எனக்கு இந்த கிரிக்கெட் வீரரை தான் ரொம்ப பிடிக்கும், என் கனவில் அவர் பல முறை வந்திருக்கிறார் என கூறினார். அந்த கிரிக்கெட் வீரர் வேறு யாருமில்லை, இந்திய அணியின் முன்னாள் தொடக்கவீரர் சுனில் கவாஸ்கர் தான்.
1992-ஆம் ஆண்டில் ஒரு பேட்டியில் ‘நான் சுனில் கவாஸ்கர் மீது பைத்தியமாக உள்ளேன்.அவர் செக்சியாக இருக்கிறார். அவருக்கு பின்னால் நான் போவேன், என் கனவில் கூட அவர் வந்திருக்கிறார். அவர் கிரிக்கெட் விளையாடியதை பார்த்துள்ளேன், இதனால் அவரை எனக்கு பிடித்து விட்டது,” என மதுர் டிக்சிட் கூறினார்.
இந்திய அணி இதுவரை பல நட்சத்திர தொடக்கவீரர்களை பார்த்துள்ளது, அதில் ஒருவர் தான் சுனில் கவாஸ்கர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10000 ரன் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் கவாஸ்கர். விவ் ரிச்சர்ட்ஸ் அடித்த 29 டெஸ்ட் சதத்தை முறியடித்து அதிக டெஸ்ட் சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். ஆனால், 2005 இல் இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் முறியடித்தார்.