சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் சர்வீசஸ் அணிக்கு எதிராக, இன்று ஆடிய கர்நாடக அணியின் கேப்டன் மணிஷ் பாண்டே அபார சதமடித்தார்.
சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான டி-20 கிரிக்கெட் போட்டி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இதில் ’குரூப் ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள கர்நாடக அணியும், சர்வீசஸ் அணியும் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் இன்று மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி, 3 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர், படிக்கல் 43 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். கேப்டன் மணிஷ் பாண்டே பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து, அதிரடியாக விளையாடினார். சர்வீசஸ் அணி கேப்டன், பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றிப் பார்த்தும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் 54 பந்துகளில் 129 ரன்கள் குவித்தார். இதில் 10 சிக்சர்களும் 12 பவுண்டரிகளும் அடங்கும்.
சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் உத்தரப்பிரதேசத்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது தமிழகம்.
இப்போட்டியில் 2 வெற்றிகளைப் பெற்றிருந்த தமிழகம், திங்கள்கிழமை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி. அணியுடன் மோதியது.
முதலில் ஆடிய தமிழகம் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுத்தது. கேப்டன் தினேஷ் காா்த்திக் 4 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 61 ரன்களையும், தொடக்க வீரா் முரளி விஜய் 1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 51 ரன்களையும் விளாசினா். ஆல் ரவுண்டா் விஜய் சங்கா் 28 ரன்களை எடுத்த நிலையில், மற்ற வீரா்கள் சொற்ப ரன்களில் வெளியேறினா்.
உ.பி. தரப்பில் அங்கித் ராஜ்புத், சௌரவ் குமாா், மோஷின்கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
உ.பி. வெற்றி:
169 ரன்கள் வெள்ளி இலக்குடன் களமிறங்கிய உ.பி. அணி 19.5 ஓவா்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
அந்த அணியில் உபேந்திர யாதவ் அபாரமாக ஆடி 5 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 70 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா். ஷுபம் சௌபே 35, அக்ஷ்தீப் நாத் 25 ரன்களை எடுத்தனா்.
தமிழகம் தரப்பில் பெரியசாமி 2, நடராஜன், முகமது, முருகன் அஸ்வின் ஆகியோா் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினா்.
திரிபுராவை 14 ரன்களில் கேரளமும், ஜம்மு-காஷ்மீரை 7 ரன்களில் ஜாா்க்கண்டும், சிக்கிமை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஒடிஸாவும், ம.பி.யை 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையும், குஜராத்தை 57 ரன்களில் சௌராஷ்ட்ராவும், அஸ்ஸாமை 3 விக்கெட் வித்தியாசத்தில் ஹரியாணாவும், ஆந்திரத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் கா்நாடகமும், சண்டீகரை 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பும், அருணாசலப்பிரதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் மகாராஷ்டிராவும், ரயில்வேயை 67 ரன்கள் வித்தியாசத்தில் சத்தீஸ்கரும், மிஸோரத்தை 31 ரன்கள் வித்தியாசத்தில் புதுச்சேரியும் வென்றன.