மிகப்பெரிய அவமானம். விராட் கோலிக்கு சமமான வீரர் தான் ஜடேஜாவும் ! பொங்கி எழுந்த முன்னாள் வீரர் 1

ஜடேஜாவிறக்கு ஏ+ பிரிவில் இடம் கொடுக்காததால் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் பொங்கி எழுந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஆண்டுதோறும் வீரர்கள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டு வரும். அந்தவகையில் கடந்த வியாழக்கிழமை பிசிசிஐ நடப்பு ஆண்டிற்கான (2020-2021) வீரர்கள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த ஒப்பந்தப் பட்டியலில் தமிழக வீரர் நடராஜனின் பெயர் இடம்பெறவில்லை. இது ரசிகர்கள் இடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

மிகப்பெரிய அவமானம். விராட் கோலிக்கு சமமான வீரர் தான் ஜடேஜாவும் ! பொங்கி எழுந்த முன்னாள் வீரர் 2

வீரர்களின் ஊதியத்தை வைத்து ஏ+, ஏ, பி, சி என நான்கு பிரிவுகளாக பட்டியலை தயாரித்து பிசிசிஐ வெளியிட்டு இருக்கிறது. இதில் ஏ+ பிரிவில் உள்ள வீரர்களுக்கு 7 கோடியும், ஏ பிரிவில் உள்ள வீரர்களுக்கு 5 கோடியும், பி பிரிவில் உள்ள வீரர்களுக்கு 3 கோடியும், சி பிரிவில் உள்ள வீரர்களுக்கு 1 கோடியும் வழங்கப்படும்.

இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் சுப்மான் கில் புதிதாக இடம்பெற்று இருக்கிறார்கள். ஹர்திக் பாண்டியா போன்று சில வீரர்களுக்கு பி பிரிவில் இருந்து ஏ பிரிவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.

மிகப்பெரிய அவமானம். விராட் கோலிக்கு சமமான வீரர் தான் ஜடேஜாவும் ! பொங்கி எழுந்த முன்னாள் வீரர் 3

ஆனால் ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா எந்தொரு மாற்றமும் இன்றி அதே ஏ பிரிவில் இருக்கிறார். ஆனால் தற்போது பிசிசிஐ தரப்பினர் ஒருவர் ரவிந்திர ஜடேஜாவை ஏ+ பிரிவுக்கு மாற்ற ஆலோசனை செய்தோம். ஆனால் ஒருசில காரணத்தினால் எந்த மாற்றயமும் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.

ஏ+ பிரிவில் தற்போது விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகிய மூவர் மட்டுமே இருக்கிறார்கள். ஏ+ பிரிவு வீரர்களை ஐசிசி தரவரிசை மூலம் தேர்வு செய்திருக்கிறார்கள். ஜடேஜா ஆல்ரவுண்டர் தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கிறார். ஓடிஐ மற்றும் டெஸ்ட் என இரண்டிலும் டாப் 10ல் ஜடேஜா இருக்கிறார்.

மிகப்பெரிய அவமானம். விராட் கோலிக்கு சமமான வீரர் தான் ஜடேஜாவும் ! பொங்கி எழுந்த முன்னாள் வீரர் 4

இதுகுறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெறிவித்து வருகிறார்கள். அந்தவகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் இதுகுறித்து ட்விட் செய்திருக்கிறார்.

அதில் “அவமானம். இவர்(ஜடேஜா) விராட் கோலிக்கு பிறகு மிகப்பெரிய வீரராக இருக்கிறார்” என்று ட்விட் செய்திருக்கிறார். ஜடேஜாவிறக்கு ஏ+ பிரிவில் இடம் கொடுக்காததால் மைக்கேல் வாகன் பொங்கி எழுந்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *