முன்னாள் ஆஸ்திரலியா அதிரடி வீரர் மைக் ஹசி தோனியின் ஓய்வு குறித்து தனது கருத்தை சர்க்சைகுரிய நேரத்தில் தெரிவித்துள்ளார். அதாவது தோனி தன் விளையாட விருபம் உள்ள வரை விளையாடுவார் அதற்கான தகுதி அவரிடம் உள்ளது. அந்த அள்விற்க்கு அவர் இந்திய கிரிகெட்ற்காக செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய இலங்கை இடயேயான 5 ஒரு நாள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடர் வரும் 20 ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. அதற்கான அணி நேற்று வெளியிடப்பட்டது. அந்த அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை மையமாக வைத்து தான் அவர் பேசியுள்ளதாக தெரிகிறது.
பதிலடி :
ஆனால் பிரசாத் இவ்வாரு தெரிவித்த அடுத்த நாளே ஆஸ்திரலிய வீரர் மைக் ஹசி தெரிவித்துள்ள இது போன்ற கருத்துக்கள் அவருக்கு பதிலடி கொடுத்தது போல் அமைந்துள்ளது.
அவர் ஒரு அசாதரனமான வீரர். அவர் இந்திய அணியின் கிரிக்கெட்டிற்கு நிறைவற்றவைகளை செய்துள்ளார். அவர் நம்பிக்கை வத்தால் அவரால் 2019 உலககோப்பை ஆட முடியும். அவர் மீது சந்ஹ்டேகம் கொள்ள யாருக்கும் தகுதி இல்லை. அவரை சந்தேக பட நீங்கள் யார்? அவர் ஒரு நேர்மையான மனிதர், அவரல் 2019 உலககோப்பையில் அணிக்கு எந்த பலனும் இல்ல என தெரிந்தால் அவராகவே அணியில் இருந்து விலகி விடுவார். அவர் நாட்டுக்காக அடுத்த உலக கோப்பை விளையாட தகுதி உடையவர் . – ஹசி
தோனி கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போடட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் கடந்த ஆண்டு ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கான கேப்டன்சியையும் விராட் கோலியிடம் ஒப்படைத்தார்.
பின்னர் ஒரளவிற்கு தனது பேட்டிங்கில் செயல்படுவந்த அவர். அவருடைய அனுபவத்தில் காரணமாக தான் அணியில் இன்னும் நீடிக்கிறார் என பலரும் சமூக வலை தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது அவருக்கு 35வயதாகிறது.
அவருக்கு ஆடத்திறன்கள் அனைத்தும் தெரியும்.தன்னுடைய உடலை கட்டுப்பாடாக வைத்துள்ளார். தர்போது உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தினாலும் வீரர்கள் இன்னும் தங்களது வீரர்கள் இன்னும் அதிக வயது வரை ஆட முடியும். தற்போது உள்ள வீரர்களில் 30 வயதிற்க்கு மேல் நன்றாக ஆடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. நானும் என்னுடைய 30 வயதிற்கு மேல் தான் மிக நன்றாக ஆடினேன். – மைக் ஹசி
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவர் 2106ல் 13 போட்டிகளில் ஆடியுள்ள அவர் வெரும் 278 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதன் சராசரி வெறும் 27 மட்டுமே.