ஆஸ்திரேலியாவில் 6 சதங்கள்: சச்சின் சாதனையை முறியடிக்க கோலிக்கு கிடைத்துள்ள வாய்ப்பு!! 1

சாதனை கிங் கோலியின் தலையில் இன்னொரு மகுடம் ஏறுவதற்காக ஆஸ்திரேலிய தொடர் காத்திருக்கிறது.  டிசம்பர் 6ம் தேதி அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

கோலி, 2018-ல் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மே.இ.தீவுகளுக்கு எதிராக சதம் எடுத்துள்ளார், மேலும் இந்த ஆண்டில் 10 போட்டிகளில் 1063 ரன்களை 59.05 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார் விராட் கோலி.

கடந்த முறை ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 4 சதங்களை அடித்து சாதனை புரிந்தார் விராட் கோலி.ஆஸ்திரேலியாவில் 6 சதங்கள்: சச்சின் சாதனையை முறியடிக்க கோலிக்கு கிடைத்துள்ள வாய்ப்பு!! 2

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் சச்சின் டெண்டுல்கர் 20 போட்டிகளி 6 சதங்கள் எடுத்துள்ளார். விராட் கோலி 11 போட்டிகளில் 5 சதங்கள் எடுத்துள்ளார் கோலி. எனவே சச்சின் டெண்டுல்கரின் 6 சதங்கள் சாதனையை முறியடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே போல் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸி. மண்ணில் 5 சதங்கள் எடுத்ததன் மூலம் சுனில் கவாஸ்கருக்கு இணையாக இருக்கிறார் விராட் கோலி, இன்னும் ஒரு சதம் எடுத்தால் கவாஸ்கரைக் கடந்து சச்சினுடன் சமன் செய்வார். இன்னொரு சதம் எடுத்தால் சச்சின் டெண்டுல்கரைக் கடந்து சாதனை நிகழ்த்துவார் கோலி.

இந்தத் தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 669 ரன்களை எடுப்பது மிகமிகக் கடினம், அப்படி எடுத்தால் அதிவேகமாக டெஸ்ட் போட்டிகளில் 7,000 ரன்களை எடுத்த சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார் கோலி.

ஆகவே இந்த சொந்த எதிர்பார்ப்புகளுடன் அணியையும் முதல் தொடர் வெற்றிக்கு இட்டுச் செல்வாரா விராட் கோலி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பயிற்சி ஆட்டத்தை நிஜ டெஸ்ட் போட்டியுடன் ஒப்பிட முடியாது என இந்திய அணியின் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவில் 6 சதங்கள்: சச்சின் சாதனையை முறியடிக்க கோலிக்கு கிடைத்துள்ள வாய்ப்பு!! 3

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது. தொடர் சமனில் முடிவதற்கு முக்கிய காரணம் மழைதான். இதைத்தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் ஜனவரி 7ஆம் வரை நடைபெறும். டெஸ்ட் தொடருக்கு பிறகு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் தொடரின் முன்னோட்டமாக ஆஸ்திரேலியா 11 அணியுடன், இந்திய அணி மோதும் 4 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி நாளை தொடங்குகிறது. சிட்னி மைதனாத்தில் நடைபெறும் இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். பயிற்சியின் போது பேட்டியளித்து இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா, “இந்திய அணியின் தற்போதைய நிலை என்னவென்று நன்றாக தெரியும். நீண்ட காலத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் விளையாடுகிறோம். நாங்கள் எதையும், யாரையும் எளிதாக எடுத்துக்கொள்ளமட்டோம். நாங்கள் மிகவும் ஊக்குவிக்கப்பட்டுள்ளோம். அதனால் கண்டிப்பாக இந்தத் தொடரை வென்றாக வேண்டும்.ஆஸ்திரேலியாவில் 6 சதங்கள்: சச்சின் சாதனையை முறியடிக்க கோலிக்கு கிடைத்துள்ள வாய்ப்பு!! 4

எனவே யாரும் தனிப்பட்ட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நினைக்க முடியாது. அணியின் வெற்றிக்காகவே அனைவரும் போராட வேண்டும். ஆஸ்திரேலியாவில் அந்த அணியை எதிர்கொள்வது கடினமாக அனைவரும் கருதுகின்றனர். ஆனால் இந்தியா வலிமையாக இருப்பதாக நான் நினைக்கிறேன். நம்மிடம் திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். பயிற்சி ஆட்டத்தை டெஸ்ட் தொடரோடு ஒப்பிட்டு பார்க்க முடியாது. ஏனென்றால் உண்மையான போட்டியின் ஆட்டக்களம் முற்றிலும் மாறுபடும்” என கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *