ஓய்வை அறிவிக்கிறார் தல தோனி..? அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது !! 1

ஓய்வை அறிவிக்கிறார் தல தோனி..? அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இந்திய அணிக்கு வெற்றிக்கேப்டனாக ஜொலித்த தோனி தலைமையில் இந்திய அணி மூன்று உலக கோப்பைகளை (டி–20 (2007 ), ஒருநாள் (2011), மினி உலகக்கோப்பை (2013, சாம்பியன்ஸ் டிராபி)) வென்றுள்ளது. இதற்கிடையில் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இவர் தவித்து வருகிறார்.

ஓய்வை அறிவிக்கிறார் தல தோனி..? அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது !! 2

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க தோனி தீவிரம் காட்டினார். இதற்கு 13ஆவது ஐபிஎல் தொடரை சிறந்த வழியாக பயன்படுத்திக்கொள்ள தோனி திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. ஆனால் கொரோனாவைரஸ் தொற்றால் ஐபிஎல் தொடர் மார்ச் 29ஆம் தேதியில் இருந்து வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தேதியிலும் ஐபிஎல் தொடரை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனால் தோனியின் சர்வதேச ரீஎண்ட்ரியும் எதிர்கால கிரிக்கெட் வாழ்வும் மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. ஒருவேளை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரத்தானால் தோனி இனி சர்வதேச அணிக்கு மீண்டும் திரும்பவே முடியாது என பலர் கருத்து தெரிவிக்க துவங்கியுள்ளனர். ஆனால் தோனியின் சிறுவயது பயிற்சியாளரான கேசவ் பானர்ஜி தோனி ஐபிஎல் தொடர் நடக்கவில்லை என்றாலும் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

ஓய்வை அறிவிக்கிறார் தல தோனி..? அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது !! 3

ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உறுதியற்ற நிலையில் உள்ளதால், தோனி ஓய்வு பெறும் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது. இதுவரை பிசிசிஐயிடம் தோனி தனது ஓய்வு குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்காத போதும் , அவரின் நெருங்கிய நண்பர்களிடம் கிரிக்கெட்டுக்கு பை-பை சொல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் 28 ஆண்டுகால உலகக்கோப்பை கனவை நினைவாக்கிய சிறந்த கேப்டனுக்கு பிசிசிஐ சரியான வழியனுப்பு கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தாலும் அதற்கு சாத்தியங்கள் குறைவு தான். இதுகுறித்து தோனியின் நெருங்கிய வட்டாரங்கள் அளித்த தகவலின் படி, ஓய்வு குறித்து பிசிசிஐயிடம் தோனி இன்னும் பேசவில்லை. ஆனால் நெருங்கிய நண்பர்களிடம் பேசியுள்ளார். சரியான நேரம் வரும்போது அவர் நிச்சயம் வெளியிடுவார். ஓய்வு பெறும் முன் தன்னை தானே ஐபிஎல் தொடரில் சோதிக்கவே தோனி இன்னும் ஓய்வை அறிவிக்கவில்லை என தெரிவித்ததாக தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *