மகேந்திர சிங் தோனிக்கு ஆதரவு தெரிவித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் விக்கெட்-கீப்பரை இந்திய அணியின் சொத்து என கூறியுள்ளார்.
இலங்கை தொடருக்கு முன்னர், இந்திய அணியின் விக்கெட்-கீப்பர் தோனிக்கு கடினமான காலம் போல் இருந்தது. 2016-இல் 13 ஒருநாள் போட்டிகளில் 278 ரன் மட்டுமே அடித்துள்ளார். இந்த ஆண்டிலும் சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 134 ரன் அடித்து, இந்த ஆண்டை சிறப்பாக வரவேர்த்தார். ஆனால், போக போக அவரது பார்ம் மங்கி போனது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 108 பந்துகளில் 54 ரன் அடித்த போதுதான், அவருக்கு மீண்டும் பிரஷர் அதிகமானது. இதனால், அவர் அணியில் இருப்பது பற்றி கேள்விகள் எழும்பின, ஆனால் தல தோனி இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடி, கேள்வி கேட்ட வாய்களில் பூட்டை போட்டார்.
இந்த இலங்கை தொடரில் 45*, 67*, 49* என சிறப்பாக ரன் அடித்தார். முதல் இரண்டு ரன்கள், முக்கியமான சேஸிங்கில் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. அந்த தொடரின் போது 300வது ஒருநாள் போட்டியை விளையாடினார் தோனி மற்றும் 100வது ஸ்டம்பிங்க்கை செய்தார்.
“இன்றும் தோனி தான் சிறந்த விக்கெட்-கீப்பர். டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றது நல்லது தான். இந்திய அணியின் சொத்தே அவர் தான். இந்திய அணியில் சீனியர் வீரர் தோனி தான்,” என ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
“இந்திய அணியில் சிறந்த வீரர் தோனி தான். 36 வயதில் சுனில் கவாஸ்கரோ அல்லது சச்சின் டெண்டுல்கரையோ வெளியே அனுப்ப நினைத்தீர்களா? இன்னும் தோனி சிறப்பாக விளையாடுகிறார்,” என அவர் மேலும் கூறினார்.