மும்பை vs டெல்லி: "நான் எந்த பொசிஷனிலும் இறங்கி செய்வேன்" ஆட்டநாயகன் பண்ட்!! 1

27 பந்துகளில் மும்பை அணியை துவம்சம் செய்த பண்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மும்பை மற்றும் டெல்லி அணிகள் இடையேயான முதல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்வி ஷா மற்றும் தவான் களமிறங்கினர். பிருத்வி ஷா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் வந்த வேகத்தில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, தவானுடன், கோலின் இங்க்ரம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி டெல்லி அணியை சரிவில் இருந்து மீட்டது.

மும்பை vs டெல்லி: "நான் எந்த பொசிஷனிலும் இறங்கி செய்வேன்" ஆட்டநாயகன் பண்ட்!! 2

தவான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த இங்க்ரம் துரிதமாக ரன் சேர்த்து விளையாடினார். இதனால், டெல்லி அணியின் ரன் வேகமும் சீராக உயர்ந்தது. இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்த நிலையில் இங்க்ரம் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இந்த நிலையில் ரிஷப் பந்த் களமிறங்கினார். முதல் 5 பந்துகளுக்கு அடக்கி வாசித்த பந்த் அதன்பிறகு தனது அதிரடியை வெளிப்படுத்தினார். ஆனால், அந்த நேரத்தில் தவான் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும், பந்த் தனது அதிரடியை தொடர்ந்தார். அடித்தால் பவுண்டரி அல்லது சிக்ஸர் என்ற நோக்கத்துடன் விளையாடியது போல் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளிலேயே ரன் குவித்து வந்தார்.

அவர் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடிக்க மறுமுனையில் கீமோ பால், அக்ஸர் படேல் என வரிசையாக ஆட்டமிழக்கின்றனர். இருப்பினும், கடைசி கட்டம் என்பதால் பந்த் தொடர்ந்து சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதன்மூலம், வெறும் 18 பந்துகளில் அவர் அரைசதத்தை எட்டினார்.

அரைசதம் அடித்த பிறகும், ஸ்டிரைக்கை எடுத்துக்கொண்டு சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக அடித்தார் பந்த். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரான பும்ராவிடமே பந்தின் அதிரடிக்கு விடை காணமுடியவில்லை.மும்பை vs டெல்லி: "நான் எந்த பொசிஷனிலும் இறங்கி செய்வேன்" ஆட்டநாயகன் பண்ட்!! 3

பந்தின் இந்த அதிரடியால், கடைசி 6 ஓவரில் மட்டும் டெல்லி அணி 99 ரன்கள் குவித்தது. இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பந்த் 27 பந்துகளில் 7 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 78 ரன்கள் எடுத்தார். அவருடைய ஸ்டிரைக் ரேட் 288.89 ஆகும். ராகுல் தெவாடியாவும் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 214 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி தடுமாற்றத்திற்கு உள்ளானது. கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 2 ரன்னிலும், குயின்டான் டி காக் 27 ரன்னிலும், பொல்லார்ட் 21 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா ரன் ஏதுமின்றியும் பெவிலியன் திரும்பினர். இந்த சறுக்கலில் இருந்து மும்பை அணியால் கடைசி வரை நிமிர முடியவில்லை. மும்பை அணிக்காக முதல் முறையாக அடியெடுத்து வைத்த யுவராஜ்சிங் அரைசதம் (53 ரன், 35 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்தது மட்டுமே உள்ளூர் ரசிகர்களுக்கு ஒரே ஆறுதலாக அமைந்தது.

மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா பேட் செய்ய வரவில்லை. இதன் மூலம் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் இஷாந்த் ஷர்மா, ரபடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக பண்ட் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் கூறுகையில், “நான் இங்கு ஒவ்வொரு நாளும் கற்றுகொள்கிறேன். சூழ்நிலைக்கு ஏற்றார் போல ஆடுகிறேன். டி20 போட்டி என்பது வித்தியாசமானவை. அதனால், நானும் வித்தியாசமாக செய்ய விரும்புகிறேன் என்றார்”.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *