515 பந்தில் 1045 ரன்கள் குவித்த இந்திய இளம் வீரர்
மும்பையை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் 515 பந்துகளில் 1045 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியர்களுக்கு பிடித்த விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. இதனால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதேனும் விளையாட வேண்டுமென்றால் அவர்களின் பெரும்பாலனோரின் தேர்வு கிரிக்கெட்டாக இருக்கும்.
அந்த வகையில் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட 14 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை சீல்ட் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் கலந்து கொண்ட ஒரு மாணவன் சிக்ஸரும், பவுண்டரிகள் விளாசி 515 பந்தில் 1045 ரன்களை குவித்து சாதித்துள்ளார்.
இரண்டு நாட்கள் மிகவும் முரட்டுத்தனமாக விளையாடிய தனிஷ்க் கவடே 67 சிக்ஸர்கள், 149 பவுண்டரிகள் விளாசி வெறும் 515 பந்தில் 1045 ரன்கள் குவித்துள்ளார்.
தனிஷ்கின் பயிற்சியாளர் கூறும் போது, இந்த திறமையான வீரன் மிக சிறப்பாக விளையாடினார். 14 வயதில் மிக அற்புதமான ஷாட்டுகள் அடித்தது வியக்க வைக்கின்றது. இந்த மைதானம் வலது பக்கம் 60-65 அடிகளும், இடது பக்கம் 50 அடிகள் கொண்டது என தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் மிகவும் முரட்டுத்தனமாக விளையாடிய தனிஷ்க் கவடே 67 சிக்ஸர்கள், 149 பவுண்டரிகள் விளாசி வெறும் 515 பந்தில் 1045 ரன்கள் குவித்துள்ளார்.
தனிஷ்கின் பயிற்சியாளர் கூறும் போது, இந்த திறமையான வீரன் மிக சிறப்பாக விளையாடினார். 14 வயதில் மிக அற்புதமான ஷாட்டுகள் அடித்தது வியக்க வைக்கின்றது. இந்த மைதானம் வலது பக்கம் 60-65 அடிகளும், இடது பக்கம் 50 அடிகள் கொண்டது என தெரிவித்துள்ளார்.