நாங்க பட்ட அசிங்கத்திற்கு இது தான் காரணம்; இலங்கை கேப்டன் தசுன் ஷானகா வேதனை !! 1
நாங்க பட்ட அசிங்கத்திற்கு இது தான் காரணம்; இலங்கை கேப்டன் தசுன் ஷானகா வேதனை

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி இலங்கையின் கொழும்பில் நடைபெற்றது.

இந்தியா இலங்கை இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

நாங்க பட்ட அசிங்கத்திற்கு இது தான் காரணம்; இலங்கை கேப்டன் தசுன் ஷானகா வேதனை !! 2

கெத்தாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி, முகமது சிராஜின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ராஹ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

நாங்க பட்ட அசிங்கத்திற்கு இது தான் காரணம்; இலங்கை கேப்டன் தசுன் ஷானகா வேதனை !! 3

 

இதன்பின் 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷனும், சுப்மன் கில்லும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். எவ்வித டென்ஷனும் இல்லாமல் ஈசியான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்த ஜோடி 6.1 ஓவரிலேயே இலக்கையும் இலகுவாக எட்டியது. இதன் மூலம் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

இந்தநிலையில், இந்திய அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷானகா முகமது சிராஜின் பந்துவீச்சு அனைத்தையும் மாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

நாங்க பட்ட அசிங்கத்திற்கு இது தான் காரணம்; இலங்கை கேப்டன் தசுன் ஷானகா வேதனை !! 4

இது குறித்து இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷானகா பேசுகையில், “முகமது சிராஜ் பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டார். ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது என்றே நினைத்தோம்.  ஆனால் வானிலை மாற்றங்கள் அனைத்தையும் மாற்றிவிட்டது. இது எங்களுக்கு கடினமான நாளாக அமைந்துவிட்டது. எங்களது திட்டங்களை மாற்றி கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பேட்ஸ்மேன்கள் எவ்வித நெருக்கடியையும் சமாளித்து விளையாட பழகி கொள்ள வேண்டும். இந்த தொடரில் எங்களுக்கு பாசிட்டிவான சில விசயங்களும் நடைபெற்றது. சதீரா, குஷால் மெண்டீஸ் ஆகியோர் சுழற்பந்து வீச்சிற்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்தனர். அதே போல் அஸலன்காவும் சிறப்பாக விளையாடினார். இந்த மோசமான தோல்வியில் இருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். ரசிகர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம், ஆனால் அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துவிட்டோம். அதற்காக மன்னிப்பும் கேட்டு கொள்கிறேன். இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *