நாங்கள் எதிரணிகள் தான்..!! எதிரிகள் அல்ல!! இந்தியா-பாக் போட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்!! 1

பரம எதிரிகள்’ என, வர்ணிக்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் மோதலில் ஒருவித விறுவிறுப்பு, படபடப்பு பற்றிக் கொள்ளும். ஆனால், ஜூனியர் உலக கோப்பை அரையிறுதியில் இரு அணி வீரர்களும் பாசத்துடன் பழகினர்.நாங்கள் எதிரணிகள் தான்..!! எதிரிகள் அல்ல!! இந்தியா-பாக் போட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்!! 2

இந்திய அணி வீரர் சுப்மன் கில் பேட்டிங் செய்த போது, ‘ஷூ லேஸ்’ அவிழ்ந்து விட்டது. உடனே அருகில் இருந்த பாகிஸ்தான் வீரர் ஒருவர், அதை கட்டிவிட்டார்.

அடுத்து இவர் சதம் அடித்த போது, களத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் பலரும், கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து பாகிஸ்தான் வீரர் ஒருவருக்கு ‘ஷூ லேஸ்’ அவிழ்ந்து விட, இந்திய வீரர் அதை சரி செய்தார்.நாங்கள் எதிரணிகள் தான்..!! எதிரிகள் அல்ல!! இந்தியா-பாக் போட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்!! 3

இதைப் பார்த்த இரு அணியின் ரசிகர்களும், தங்களது பகைமை உணர்வை மறந்து பாராட்டு தெரிவித்தனர். தவிர, ‘டுவிட்டர்’ இணையதளத்திலும் இரு அணி வீரர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிகின்றன.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் இன்று இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. கிறிஸ்ட்சர்ச்சில் இந்திய நேரப்படி இன்று (30-ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு போட்டி தொடங்கியது. இந்திய கேப்டன் பிரித்விஷா ‘டாஸ்’ ஜெயித்து பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய கேப்டன் பிரித்விஷாவும், மஞ்சோத் கல்ராவும் அபாரமான தொடக்கத்தை கொடுத்தனர். 15.3 ஓவர்களில் 89 ரன்கள் சேர்த்த நிலையில் பிரித்விஷா (41 ரன்கள்) ரன் அவுட் ஆனார். மஞ்சோத் கல்ரா 47 ரன்களில் அவுட் ஆனபோதும், ‘ஒன் டவுன்’-ல் இறங்கிய ஷூப்மான் கில் மொத்த சுமையையும் தனது முதுகில் ஏற்றிக்கொண்டார்.

நாங்கள் எதிரணிகள் தான்..!! எதிரிகள் அல்ல!! இந்தியா-பாக் போட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்!! 4
India’s Shubman Gill celebrates 100 runs during the U19 semi-final cricket World Cup match between India and Pakistan at Hagley Oval in Christchurch on January 30, 2018. / AFP PHOTO / Marty MELVILLE (Photo credit should read MARTY MELVILLE/AFP/Getty Images)

மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டிருந்தபோதும், ஷூப்மான் கில் தனி ஆளாக ரன்களை குவித்துக் கொண்டிருந்தார். விக்கெட் கீப்பர் ஹர்விக் தேசாய் (20 ரன்கள்), அனுக்குல் சுதாகர் ராய் (33 ரன்கள்) ஆகிய இருவர் மட்டுமே அவருக்கு ஓரளவு துணையாக இருந்தனர்.

ஷூப்மான் கில் இறுதி வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்று 102 ரன்கள் (94 பந்துகள்) குவித்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். 74 ரன்களை களத்தில் ஓடியே அவர் எடுத்தது குறிப்பிடத்தக்கது. அவரது கடின உழைப்பு கலந்த பொறுப்பான ஆட்டத்தால் 50 ஓவர்களில் இளம் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை சேர்த்தது.

பின்னர் 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தானை, இந்திய பந்து வீச்சாளர்கள் நிலைகுலைய வைத்தனர். வெறும் 29.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் இளம் அணி, 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடி வென்றது இந்தியா.நாங்கள் எதிரணிகள் தான்..!! எதிரிகள் அல்ல!! இந்தியா-பாக் போட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்!! 5

பாகிஸ்தான் தரப்பில் விக்கெட் கீப்பர் ரோகால் நசிர் (18 ரன்கள்), சாத் கான் (15 ரன்கள்), முகம்மது மூசா (அவுட் இன்றி 11 ரன்கள்) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டனர். இந்திய பந்து வீச்சாளர்களில் இஷான் போரெல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகனாக ஷூப்மான் கில் அறிவிக்கப்பட்டார்.

இந்தப் போட்டியில் வென்றதன் மூலமாக 6-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்திருக்கிறது இளம் இந்தியா. இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *