இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து அணி கும்ப்ளே விலகியதால் தற்போது பிசிசிஐ இந்திய அணிக்கு புதிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரை நியமிக்க உள்ளது.
புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பொறுப்பு பிசிசிஐ மற்றும் CAC குழுவிற்கு வழங்க பட்டு உள்ளது. இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற ஆய்வு ஜூலை 10ஆம் தேதியில் துடங்க உள்ளது.
ஜூலை 9ஆம் தேதி முதல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் காலம் முடிவடையும்.
முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லிக்கு பயிற்சியாளரை தேர்ந்து எடுப்பதில் எந்த சம்மந்ததும் இல்லை என்று கூறியது.ஆனால் தற்போது விராட் கோஹ்லியின் முடிவையும் குழு ஆலோசை செய்ய உள்ளது.
விண்ணப்பித்த வீரர்கள் :
தற்போது இவரும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து உள்ளார். இதுவரை ஏற்கனவே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி, விரேந்தர் சேவாக்,பில் சிம்மன்ஸ், லால் சந்த் ராஜ்புட், டாம் மூடி மற்றும் ரிச்சர்ட் பைபஸ் ஆகியோர் விண்ணப்பித்து உள்ளார்கள்.
இதில் ரவி சாஸ்திரிக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளதாக கூறிகிறார்கள்.
ரவி சாஸ்திரி தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரக வர வேண்டும் என்று என்னும் இந்திய வீரர்கள் :
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக விரும்புகிறார்கள் என்று NDTV தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு சமீபத்தில் விண்ணப்பித்த சாஸ்திரி பதவிக்கு வீரர்களின் விருப்பமான வேட்பாளர் ஆவார்.
ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க பட்டாள் எந்த எந்த வீரர்களுக்கு இந்திய அணியை விட்டு எளியேற்ற படுவார்கள் என்று பார்க்கலாம்.
யுவராஜ் சிங் :
யுவராஜ் சிங் சாம்பியன் ட்ரோபி போட்டிகளிலும் சேரி தற்போது நடந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் சேரி இவர் சரியாக விளையாடவில்லை. சாம்பியன் ட்ரோபியில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 52 ரன்கள் அடித்தார் அதற்கு பிறகு இவர் எந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை.
இதனால் இவருக்கு பதிலாக இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.
தோனி :
இந்திய அணியில் யுவராஜ் சிங்கை போலவே தோனியும் பெரிதாக எதுவும் செய்யவில்லை, அப்போ அப்போ ஒரு சில போட்டிகளில் தோனி அரை சதம் அடித்து தன் வாய்ப்பை தக்க வைத்து கொள்ள முயற்சி செய்கிறார்.
இந்திய அணியில் தோனியின் இடத்தை இளம் வீரரான ரிஷாப் பண்டிற்கு கொடுக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.