தென்ஆப்பிரிக்கா அணியில் விக்கெட் கீப்பராக அறிமுகமானவர் டி வில்லியர்ஸ். முதுகு வலி காரணமாக கீப்பர் பணியை விட்டுவிட்டு பேட்ஸ்மேனாக மட்டும் வலம் வருகிறார். கடந்த ஆண்டு இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் தனது பணிச்சுமையை குறைப்பதற்காக டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா மண்ணில் இந்தியா, ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கிறது. இந்த தொடர்கள் தென்ஆப்பிரிக்கா அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தென்ஆப்பிரிக்கா அணியில் தற்போது குறிப்பிடத்தகுந்த பேட்ஸ்மேன்கள் இல்லை. இங்கிலாந்து தொடரில் சொதப்பி வருகிறார்கள். இதனால் டி வில்லியர்ஸ் அணிக்கு திரும்ப வேண்டும் என பொல்லாக் கூறியுள்ளார்.
இதுகுறித்து பொல்லாக் கூறுகையில் ‘‘டி வில்லியசர்ஸை சமாதானப்படுத்தி மீண்டும் அணிக்கு திரும்ப அழைக்க வேண்டும். இந்தியா, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு பெரிய தொடர்களில் விளையாடுவதற்காக குறைந்தது 6 மாதத்திற்கு அவரை இடம்பெற வைக்க வேண்டிய முயற்சியில் ஈடுபட வேண்டும். அவராகவே அணயில் இடம்பெற வேண்டியது அவசியம்.
அதன்பிறகு சிறப்பாக விளையாடக்கூடிய வீரரை நாம் தேடி கண்டுபிடிக்க வேண்டும். இவை தென்ஆப்பிரிக்காவிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என நினைக்கிறேன்’’ என்றார்.