18 வயது பையனுக்கு அடித்தது ஜாக்பாட்… 1.2 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்து  !! 1
18 வயது பையனுக்கு அடித்தது ஜாக்பாட்… 1.2 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்து

19 வதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டனான ப்ரிதீவ் ஷாவை 1.2 கோடி ரூபாய் கொடுத்து  டெல்லி டேர்டெவில்ஸ் எடுத்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.

18 வயது பையனுக்கு அடித்தது ஜாக்பாட்… 1.2 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்து  !! 2

இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ள நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில்  நடைபெற்று வருகிறது.

இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஏலத்தில், 8 அணியின் உரிமையாளர்களும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை எடுக்க பங்கேற்றுள்ளனர்.

இதில் 19 வயதுகுட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியை கம்பீரமாக வழிநடத்தி வரும், கேப்டன் ப்ரிதீவ் ஷாவை(18) இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் ஆலோசகராக உள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

18 வயது பையனுக்கு அடித்தது ஜாக்பாட்… 1.2 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்து  !! 3

தனக்கான அடிப்படை விலையாக வெறும் 20 லட்சத்தை மட்டுமே நிர்ணனயம் செய்திருந்த இவரை, இளம் வீரர்கள் எப்பொழுதும் முக்கியத்துவம் கொடுக்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 1.20 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியிருப்பதை டெல்லி ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் வரவேற்றுள்ளனர். மேலும் ப்ரீதீவ் ஷாவிற்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *