கவுன்டியில் இந்தியர்கள் :
இந்திய சுழழ் ஜாலங்கள் இரண்டும் இங்கிலாந்தில் உள்ள கவுன்ட்டி அணியான வோசிஸ்டர்ஷையரில் ஆடப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.இங்கிலாந்து கவுன்ட்டி அணியான வோர்சிஸ்டர்ஷையர் அணி அஸ்வின் மற்றும் ஜடேஜாவை தங்கள் அணிக்கு ஆட ஒப்பந்தம் செய்ய முயற்ச்சிகள் நடந்து வருவதாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய அணி வீரர்களை இந்தியாவை தவிர வெளிநாடுகளில் நடக்கும் டி20 தொடர்களில் விளையாட அனுமதிப்பபது இல்லை. வீரர்களை காயத்திலிருந்து காக்கவும் ,மனதளவில் அவர்கள் சோர்வ்டையாமல் வைக்கவும் இவ்வாறு வெளி நாடுகளில் நடக்கும் தொடர்கள் மற்றும் முதல் தர போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களை அனுமதிப்பது இல்லை.
ஆனால் கடந்த காலங்களில் ஆனால் கடந்த காலங்களில் செட்டேஸ்வர் புஜரா கௌதம் கம்பீர், ஜாகிர்கான், ராகுல் ராவிட் போன்ற்ற இந்திய வீரர்கள் கௌவுன்டி சாம்பின்ஷிப் முதல்தர போட்டியில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சச்சின் டெண்டுல்கர் கூட கௌவுன்டி சாம்பியன்ஷிப் முதல்தர போட்டியில் விளையாடி உள்ளார்.
அஷ்வின், ஜடேஜா மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோரை இந்த சீசனிலேயே கௌவுன்யில் விளையாட வைக்க முயற்ச்சிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக வோசிஸ்டர்ஷையர் அணி நிர்வாகம் கூறியுள்ளது. இலங்கை உடனான முலுத்தொடரும் வருகின்ற செப்டம்பர் 6 அம் தேதி முடிவடைகிறது. அதன் பின்னர் இந்தியாவில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்கிறது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இன்னும் முடிவாக வில்லை. அவ்வாரானால் இந்திய வீரர்களின் சேவை தங்களது அணிக்கு கிடைக்கும் என நினைத்து வருகிறது. அதே போல் நாட்டிங்காம்ஷைர் கவுன்டி அணியும் சாம்பியன்ஷிப் தொடரில் புஜாரா விளையாடுவார் என நினைக்கிறது. அவரை விளையாட வைக்க முயற்ச்சிகள் மேற்க்கொண்டு வருகிறது.
சாம்பியன்ஷிப்பின் கடைசி இரண்டு வாரங்கள் தங்கள் அணிக்காக இந்திய வீரர்கள் விளையாடினால் சிறப்பாக இருக்கும். என இரு அணி நிர்வாகங்களும் தெரிவித்துள்ளன. ஜாகிர் கானும் வோசிஸ்டர்ஷையர் அணிக்காக விளையாடியுள்ளார். அவரும் கவுன்டியில் விளையாடியதால் தனது ஆட்ட திறன் மேம்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
என்ன வாயினும் இந்திய வீரர்களை கவுன்டி முதல் தர சம்பியன்ஷிபில் அனுமதிப்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தான் முடிவெடுக்கும்.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய அணி வீரர்களை இந்தியாவை தவிர வெளி நாடுகளில் நடக்கும் டி20 தொடர்களில் விளையாட அனுமதிப்பபது இல்லை.
புஜாரா வை வேண்டுமானால் அனுமதிக்கலாம் என் தெரிகிரது. ஏனெனில் டெஸ்ட் போட்டியை தவிற இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் அவர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது. மேலும் த்ற்போது இந்திய மண்ணில் தொடர்ந்து 23 போட்டிகள் கொண்ட முழு போட்டிகளில் ஆஸ்திரலியா, நியூசிலாந்து மற்றும் இலங்கையுடன் விளையாட உள்ளது. இதன் காரணமாகவும் அவர்களை அனுமதிப்பது கடினம் என தெரிகிறது.