இதுதான் எங்க திட்டமே; இதுல வெற்றியும் பெற்றுவிட்டோம் ! – ரஹானே
சிட்னி மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய 338 ரன்கள் குவித்தனர். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் முன்னிலை வகித்து, தனது 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 407 என்ற மிகப்பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.
மிகப்பெரிய இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 334 ரன்களை குவித்து கடைசி வரை நின்று போட்டியை ட்ரா செய்தது. இறுதி நாள் போட்டியில் புஜாரா 77 ரன்களும் ரிஷப் பந்த் 97 ரன்கள் குவித்து தங்களது விக்கெட்டை இழந்தனர். இதன் பிறகு விஹாரி மற்றும் அஸ்வின் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர்.
தேனீர் இடைவேளைக்கு பின் இந்திய அணிக்கு 127 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு குறைவாகவே இருந்ததால் விஹாரி மற்றும் அஸ்வின் இருவரும் இணைந்து போட்டியை ட்ரா செய்ய திட்டமிட்டனர். இதனால் இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். ஐந்தாவது நாள் முடிவு வரை இவர்கள் இருவரும் தங்களது விக்கெட்டை இழக்காமல் வெற்றிகரமாக போட்டியை ட்ரா செய்துவிட்டனர்.
இந்த மூன்றாவது டெஸ்டில் விஹாரி மற்றும் அஸ்வின் இவர்களது பங்கு பெருமளவில் இடம்பெற்றிருந்தது. இதில் விஹாரி 161 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அஸ்வினும் 128 பந்துகளை சந்தித்து 39 ரன்களை குவித்தார். இந்நிலையில் இந்திய அணி போட்டியை ட்ரா செய்தது குறித்து கேப்டன் ரஹானே பேசியிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய ரஹானே “ இறுதி நாள் போட்டி தொடங்குவதற்கு முன்பே நாங்கள் போராடி தான் ஆக வேண்டும் என்பதை உணர்ந்தோம். இதுகுறித்து நாங்கள் அனைவரும் இறுதி நாள் காலையில் அனைவரும் கலந்துரையாடினோம். முடிவைப் பற்றி கவலை வேண்டாம். இறுதி நொடி வரை போராட வேண்டும் என்று திட்டமிட்டோம்” என்று ரஹானே கூறியிருந்தார்.