இந்திய கிரிக்கெட் அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் சில டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் ராகுல் சர்மா கடைசியாக 2014இல் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடினார், அதன் பிறகு அவர் எந்த ஒரு போட்டியும் விளையாடவில்லை. இதனால், பல பேர் அவரை நியாபகம் இருக்காது. சண்டிகரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் அவர் தங்கி இருக்கிறார். தோனி மற்றும் மற்ற இந்திய வீரர்களை அவர் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது சந்தித்து இருக்கலாம், ஆனால் அவர் இரண்டாவது ஒருநாள் போட்டியை அவரது தொலைக்காட்சியில் பார்த்தார்.
“காயங்கள் காரணமாக கடந்த இரண்டு வருடம் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. மீண்டும் ஒரு முறை பஞ்சாப் அணியில் இடம் பெற எனக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. மாவட்ட அளவில் நடக்கிற போட்டி டிசம்பர் 23ஆம் தேதி தொடங்குகிறது. அதில் சிறப்பாக செயல்பட வேண்டும். இனி காயங்கள் ஏற்படாமல் நான் சிறப்பாக விளையாடவேண்டும்,” என ராகுல் சர்மா கூறினார்.
டெக்கான் சார்ஜர்ஸ் , புனே வாரியர்ஸ் இந்தியா, டெல்லி டேர்டெவில்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக சிறப்பாக விளையாடி தான் யார் என காட்டினார் ராகுல் சர்மா. 2011ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர் வீசி 7 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். அந்த சீசனில் அவர் 16 விக்கெட் எடுத்து அசத்தினார்.
இதுவரை இந்திய அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் சில டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார் ராகுல் சர்மா. அவர் கடைசியாக 2014 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடினார். அதன் பிறகு சில பிரச்சனையால் அவரால் இந்திய அணியில் இடம் பெற முடியவில்லை.
“அனைத்தும் முதுகு வலியில் இருந்து தான் தொடங்கியது , அதன் பிறகு தோள்பட்டை மற்றும் முட்டியில் காயம் ஏற்பட்டது. கடந்த வருடம் பஞ்சாப் டி20 அணியில் இடம் கிடைத்தது ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த வருடம் ஐபில் தொடருக்கு முன்பு டெல்லி ட்ராயல்சுக்கு அழைத்தார், ஆனால் முதல் பந்தின் போது மீண்டும் காயம் ஏற்பட்டது. ஆகஸ்ட் மாதம் பஞ்சாபில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் சிறப்பாக செயல் பட்டேன். அந்த போட்டியின் போது முட்டியில் காயம் ஏற்பட்டது. இப்போது குணமாகி விட்டது,” என அவர் மேலும் கூறினார்.
அவர் மது அருந்தியதால் தான் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என தகவல்கள் வந்தன. அதை பற்றியும் அவர் பேசினார்.
“பார்ட்டியில் அது போன்று ஒன்றும் நடக்கவில்லை. நாங்கள் ஒரு ஹோட்டலில் இருந்தோம். நான் ஒரு புஞ்சாபி, எனக்கு பார்ட்டியில் ஆட்டம் போடுவது மிகவும் பிடிக்கும். நான் மொட்டை மாடியில் இருந்தேன். என்னுடைய அளவு எனக்கு தெரியும். நான் மது அருந்தவில்லை. எனக்கு கிரிக்கெட் தான் முக்கியம். நான் தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்துவிட்டேன்,” எனவும் அவர் கூறினார்.
“நான் மது அருந்தியதால் தான் எனக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என மக்கள் கூறுகிறார்கள். உண்மையை எப்படி புரியவைப்பது என்று தெரியவில்லை. அதன் பிறகு நான் மூன்று வருடம் கிரிக்கெட் விளையாடினேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. ஒருமுறை நான் விளையாட தொடங்கினால், என் மீது இருக்கும் தவறான பெயரை நீக்கிவிடுவேன். இந்த கடைசி இரண்டு வருடம் கடினமாக தான் இருந்தது. இந்த இரண்டு வருடம் இந்திய அணிக்காக என்னால் முடிந்தது நிறைய செய்திருப்பேன்,” என ராகுல் சர்மா தெரிவித்தார்.