இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பிக்சிங் வழக்கில் மாட்டியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை இரண்டு வருடத்திற்கு விளையாட தடை செய்தார்கள், இரண்டு வருடம் தடை முடிந்ததால் அடுத்த வருடம் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாட இரண்டு அணியும் களமிறங்க தயாராகவுள்ளது. 2011-இல் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை நீக்கியதற்காக அந்த அணிக்கு பிசிசிஐ தரக்கூடிய 800 கோடியை கேரளா அணி மறுத்தது, இதனால் அந்த அணிக்கு இதை விட அதிகமாக தான் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்ப்பூர் மாநிலத்தின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவர்கள் அணியின் பெயரில் இருந்து ‘ராஜஸ்தன் என்னும் பெயரை நீக்க வேண்டும் என ஐபில் ஆளும் கவுன்சிலிடம் முறையீடு செய்தனர், இதற்கு ஆளும் கவுன்சலும் ஒப்புக்கொண்டது.
“ராஜஸ்தான் ராயல் அணியின் பெயரில் இருந்து ராஜஸ்தான் என்ற வார்த்தையை நீக்க அப்பீல் செய்தார்கள், இதனை ஆளும் கவுசிலும் ஒப்புக்கொண்டது. தற்போது அந்த அணியின் பெயர் வெறும் ‘ராயல்ஸ்’ தான்,” என ஐபில் ஆளும் கவுன்சில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த பெயரை மாற்றியது மூலம் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, ராயல்ஸ் அணியின் உரிமையாளராக மாறினார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இரண்டு வருடம் தடை விதித்ததும், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி ஐபில்-இல் விளையாடியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளரிடம் தன் பங்கை கொடுத்துவிட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது 50 லட்சம் ருபாய் வைத்துள்ளது, அணியின் உரிமையாளர் மாறியதால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 லட்சம் கொடுக்க வேண்டும். அதே போல், 1000 கோடி ஒப்பந்தம் செய்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு 50 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும்.
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியின் உரிமையாளர் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 1000 கோடி ரூபாய் கேட்டது மட்டும் இல்லாமல், எங்களையும் ஐபில்-இல் சேர்க்கவேண்டும் என அந்த அணியின் உரிமையாளர் கேட்டுள்ளார். சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி மீண்டும் வரும்போது, தப்பு செய்யாத எங்கள் அணியும் விளையாடவேண்டும் என அந்த அணியின் உரிமையாளர் பிசிசிஐ-யிடம் கேட்டுள்ளார்.