இதுதான் உண்மை ! சிஎஸ்கே பவுலரின் ஆட்டத்தை கண்டு மிரண்டு போன இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 1

14வது ஐபிஎல் சீசனின் 8வது லீக் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும், கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்ஸ்மன்கள் சிஎஸ்கே பவுலர்களின் சூழ்ச்சியில் சிக்கி தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்தனர். சிஎஸ்கே பவுலர் தீபக் சஹார் பஞ்சாப் பேட்ஸ்மன்களை திணற வைத்திருக்கிறார். இவர் தனது முதல் ஓவரிலே பஞ்சாப் தொடக்க வீரர் மயங்க் அகர்வாலின் விக்கெட்டை எடுத்தார்.

இதுதான் உண்மை ! சிஎஸ்கே பவுலரின் ஆட்டத்தை கண்டு மிரண்டு போன இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 2

இதன்பிறகு கே எல் ராகுல் ஒரு ரன் எடுக்க முயன்று ரவிந்திர ஜடேஜாவால் ரன் அவுட் செய்யப்பட்டார். தனது மூன்றாவது ஓவரை வீசிய தீபக் சஹார் கெயில் மற்றும் பூரன் விக்கெட்டை எடுத்தார். இதைத்தொடர்ந்து தனது நான்காவது ஓவரில் தீபக் ஹுடாவின் விக்கெட்டை எடுத்து அசத்தினார்.

இதன்மூலம் தீபக் சஹார் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி கெத்து காட்டியிருக்கிறார். இவர் 3.2 எக்னாமி ரேட் பெற்று இருக்கிறார். தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்த பஞ்சாப் அணியில் தமிழக வீரர் மட்டும் தனியாளாக நின்று 47 ரன்கள் குவித்து இருக்கிறார்.

இதுதான் உண்மை ! சிஎஸ்கே பவுலரின் ஆட்டத்தை கண்டு மிரண்டு போன இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 3

இதில் கே எல் ராகுல் 5, மயங்க் அகர்வால் 0, கெயில் 10, தீபக் ஹுடா 10, பூரான் 0, ரிச்சர்ட்சன் 15, அஸ்வின் 6, முகமது ஷமி 9 ரன்கள் குவித்து இருக்கின்றனர். இதன்மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 106 ரன்கள் குவித்து இருக்கின்றனர்.

இதில் சிஎஸ்கே பவுலர் சாம் கரன், பிராவோ, மொயின் அலி தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருக்கின்றனர். தற்போது சிஎஸ்கே 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறிய இலக்குடன் களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி அசத்திய தீபக் சஹாரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதுதான் உண்மை ! சிஎஸ்கே பவுலரின் ஆட்டத்தை கண்டு மிரண்டு போன இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 4

இந்நிலையில், சிஎஸ்கே பவுலர் தீபக் சஹாரின் பந்துவீச்சை கண்டு இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மிரண்டு போய் ட்விட்டரில் கருத்து தெறிவித்து இருக்கிறார். அதில் “இதுதான் நிரூபிக்கப்பட்ட உண்மை. சிறப்பாக ஸ்விங் பந்துவீச்சின் மூலம் கட்டுப்படுத்துவது, பேட்ஸ்மன்களின் ஆட்டத்தை நொறுக்கிவிட முடியும். தீபக் சஹார் சூப்பரான வேரியேசன்களில் வீசியிருக்கிறார்” என்று தன் ட்விட் மூலம் கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *