வீடியோ : சக வீரர்களிடம் அசிங்கப்பட்ட ரிஷப் பண்ட ! இவரோட விக்கெட்டுக்காக எல்லாருகிட்டயும் கெஞ்சிய பண்ட் !
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்டில் நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 15ம் தேதியில் இருந்து பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்டில் இந்திய வீரர்கள் ஜடேஜா, பும்ரா, அஸ்வின் மற்றும் விஹாரி ஆகியோர் காயமடைந்ததால் தற்போது நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் மற்றும் மயங்க் அகர்வால் நான்காவது டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் பேட் செய்தது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்களை இழந்து 274 ரன்கள் குவித்தது. இதையடுத்து இரண்டாவது நாளில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களை இழந்து 369 ரன்கள் குவித்துள்ளனர். இதில் லபுசாக்னே 108, பெய்ன் 50, கிரீன் 47 மற்றும் வேட் 45 ரன்கள் குவித்துள்ளனர். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிஸ்சில் 2 விக்கெட்களை இழந்து 62 ரன்கள் குவித்துள்ளனர். இதில் ரோகித் சர்மா 44 மற்றும் சுப்மன் கில் 7 ரன்கள் குவித்துள்ளார்கள்.
தற்போது புஜாரா (8) மற்றும் ரஹானே (2) விளையாடி வருகின்றனர். ஆனால் இரண்டாவது நாள் உணவு இடைவெளிக்கு பின்பு கனமழை காரணமாக போட்டி இன்று முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அறிமுக வீரரான நடராஜன் தனது 19வது ஓவரை வீசியபோது டிம் பெய்ன் மற்றும் கேமரூன் கிரீன் பேட்டிங் செய்து வந்தனர். நடராஜனின் 19வது ஓவரின் மூன்றாவது பந்தை டிம் பெய்ன் எதிர் கொண்டார். அப்போது டிம் பெய்ன் எதிர்கொண்ட பந்து பேட்டிற்கு அருகில் சென்று பேட்டில் படாமல் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிம் சென்றது.
பண்ட் பந்து பேட்டில் பட்டுவிட்டது, அதை நான் கேட்ச் பிடித்துவிட்டேன் என்று நடுவர்களிடம் விக்கெட் கேட்டார். பண்ட் தவிற மற்ற வீரர்கள் யாரம் நடுவர்களிடம் அந்த விக்கெட் கேட்கவில்லை. நடுவர்கள் மறுப்பு தெறிவித்த பின் புஜாரா, ரோகித் சர்மா, ரஹானேவிடம் கேட்டார். இவர்களும் இல்லை என்று கூறி பண்ட்டை கண்டு சரித்துள்ளனர். இதனால் பண்ட் சோகத்துடன் மீண்டும் தனது இடத்திற்கு சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.